search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கா"

    • அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது.
    • மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்தை விட இங்கு தான் அதிகம் ஓடுகிறது.

    சசிகலா புரடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம், "கா".

    இந்த படம் மார்ச் 22-ம்ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாக்யராஜ், "ஆண்ட்ரியா இப்படத்தில் எந்தளவு கடினமாக உழைத்துள்ளார் என இயக்குநர் கூறினார் அவருக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் சினிமா என்பது அனுபவம் என்றார். அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது."

     


    "அந்த காலத்தில், வெளியாகும் ரிவால்வர் ரீட்டா போன்ற பெண்கள் நடிக்கும் ஆக்சன் படங்கள் எனக்குப் பிடிக்கும். விஜய சாந்தி இது போல் படங்கள் செய்தார். இப்போது ஆண்ட்ரியா ஆக்சன் செய்துள்ளார். பார்க்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. இப்படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்."

    "மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்தை விட இங்கு தான் அதிகம் ஓடுகிறது. அடுத்த ஊரில் எடுக்கும் படங்கள் ஓடுகிறது. மக்கள் ரசிப்பதால் தான் ஓடுகிறது. நம்மூர் எழுத்தாளர் அதைக் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிலும் படத்தை மட்டுமின்றி கேரள மக்களை விமர்சித்து விட்டார். பெரிய எழுத்தாளர் இப்படிப் பேசியது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இதை இப்போது சொல்லக்காரணம் தமிழர்கள் யாரும் கண்டிக்க வில்லையே என கேரள மக்கள் நினைத்து விடக்கூடாது," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆலோசனை நடந்தது.
    • பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடந்தது.

    இதில் தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உதய் திட்டம், பிரதமரின் பசல் பீமா யோஜனா, சமக்ர சிக்சா, தேசிய சமூக உதவித் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம், தீன்தயாள் உபாத்தியாய்-அந்தியோதயா யோஜனா, சத்துணவுத் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம்-கிராமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், தேசிய ரூர்பன் திட்டம், பிரதமரின் ஆதர்ஸ் கிராம் யோஜனா, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய, மாநில அரசின் துறைகள் ரீதியாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.

    இதில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை களையும் முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களை பரிந்துரை செய்து, நிதி மற்றும் சலுகைகளை பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் வெண்ணிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சேகர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×