search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுந்தப்பாடியில்"

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (16-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்கா நல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல்,

    கிருஷ்ணாபுரம், தர்மாபுரி, கவுந்தப்பாடி புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம்,

    குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்க வலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம்,

    செட்டிபாளையம், ஆவரங்காட்டு வலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம், செரயாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • கவுந்தப்பாடி- சக்தி ரோடு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள திரு.வி.க.வீதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
    • வீட்டில் குடியிருந்த மாது மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் என்ன மொத்தம் 4 பேர் உயிர் தப்பினர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.

    அதனை தொடர்ந்து நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூர் பகுதிகளில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் குண்டேரிபள்ளம், கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடிவேரி, கவுந்தப்பாடி, பவானி, தாளவாடி, ஈரோடு, பவானிசாகர், அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.

    கவுந்தப்பாடி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு கவுந்தப்பாடி- சக்தி ரோடு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள திரு.வி.க.வீதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் குடியிருந்த மாது மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் என்ன மொத்தம் 4 பேர் உயிர் தப்பினர்.

    இந்நிலையில் இன்று காலை முதலே ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகர பகுதியில் காலை 8 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    இதேபோல் கோபி, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். மாணவ -மாணவிகள் குடைப்பிடித்தபடி பள்ளிக்கு சென்றனர்.

    இதேபோல் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. 

    ×