search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதலன் வெறிச்செயல்"

    ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை, கள்ளக்காதலன் கழுதை அறுத்து கொலை செய்தார்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது பேய்க்குளம் கிராமம். இங்குள்ள சோளக் காட்டில் இன்று பிற்பகல் அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் சென்றனர்.

    அப்போது சோளக்காட்டு நடுவே 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தது அதே கிராமத்தைச் சேர்ந்த ஜோதி (வயது 35) என தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    பேய்க்குளத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜோதி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

    அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி (50) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

    இந்த தகவல் முருகனுக்கு தெரியவரவே, ஜோதியை கண்டித்துள்ளார். மேலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி ஜோதிக்கு அறிவுரை கூறப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஜோதி ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள சோளக்காட்டுக்கு ஓட்டிச் சென்றார்.

    அப்போது அங்கு வந்த பெரியசாமி ஆசைக்கு இணங்குமாறு ஜோதியை வற்புறுத்தினார். ஆனால் அவரோ மறுத்து பெரியசாமியை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த கதிர் அரிவாளால் ஜோதியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்குச் சென்று விட்டார்.

    இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஜோதி வராதது கண்டு நேற்று இரவு முழுவதும் கணவர் மற்றும் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று சோளக்காட்டில் ஜோதி பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் பதுங்கி இருந்த பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பத்தூர் அருகே அங்கன்வாடி பெண் ஊழியரை அவரது கள்ளக்காதலன் கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாபட்டு ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி சுதா (வயது 32). அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளராக உள்ளார். 7 வயதில் 1 மகள் உள்ளார்.

    கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பசுபதி இறந்துவிட்டார். இதனையடுத்து சுதா அவரது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று அங்குள்ள பாம்பாறு ஆற்றில் உள்ள ஒரு பள்ளத்தில் சுதா தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இதனால் அவரது உடல் முழுவதும் ரத்தம் காணப்பட்டது. இதனை கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் குரிசிலாபட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த டெய்லர் சதீஷ் (32) என்பவருக்கும் கள்ளதொடர்பு இருந்தது தெரியவந்தது.

    போலீசார் சதீசை பிடித்து கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். இதில் சுதாவை சதீஷ் கொலை செய்தது தெரியவந்தது.

    கணவனை இழந்து தனிமையில் இருந்த சுதாவுக்கும் சதீசுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. சதீஷ் சுதாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு சுதாவின் வீட்டுக்கு சதீஷ் வந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்து ஆண் ஒருவர் வேகமாக வெளியேறி சென்றார்.

    அவர் யார் என்பது குறித்து சதீஷ் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    சுதாவின் நடத்தையில் சதீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று இரவு சுதாவை அவரது மோட்டார் சைக்கிளில் பாம்பாற்றுக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுதாவின் தலையில் கல்லை போட்டு சதீஷ் கொலை செய்துள்ளார்.

    அவரது உடலை ஆற்றில் உள்ள பள்ளத்தில் தூக்கிபோட்டு விட்டு சேலையால் உடலை மூடிய சதீஷ் அங்கிருந்து புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள கிணற்றுக்குள் தள்ளிவிட்டுவிட்டு சதீஷ் வீட்டுக்கு சென்று எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார்.

    இந்த தகவல்களை சேகரித்த போலீசார் சதீசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    ×