search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர் மரணம்"

    • ரெயில் நகர் சந்திப்பு அருகே வந்தபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக லட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
    • கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது 21). மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக் கழகம் ஒன்றின் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு சட்ட படிப்பு படித்து வந்தார்.

    இவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் உடன் படிக்கும் நண்பரான ரோகித் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். ரெயில் நகர் சந்திப்பு அருகே வந்தபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக லட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற லட்சுமிநாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த ரோகித்தை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர் கார்த்திக் இறந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் அவரது சகோதரி இளவரசி புகார் அளித்தார்.
    • இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பெருமாள்பட்டியை சேர்ந்தவர் காளையப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 19). இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த வாரம் கார்த்திக்குக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர்களது ஊர் விருதுநகர் மாவட்டத்தின் அருகில் இருக்கிறது. இதனால் கார்த்திக்கை அவரது குடும்பத்தினர், ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு குடல் இறக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை அந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.

    நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி கார்த்திக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அறுவை சிகிச்சை அறையில் இருந்து தீவிர சிகிச்சை வார்டுக்கு மாற்றுவதற்காக கார்த்திக்கை அழைத்துச் சென்றுள்ளனர்.

    அப்போது அவர் அசைவின்றி படுத்திருப்பதை பார்த்து அவரது சகோதரி இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது பற்றி கேட்டபோது, மயக்க நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிறிது நேரத்தில் கார்த்திக் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் சகோதரி மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சையளித்ததால் அவர் இறந்ததாக குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மாணவர் இறந்த ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அங்கு கார்த்திக்கின் உடலை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவர் கார்த்திக் இறந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் அவரது சகோதரி இளவரசி புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×