search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் நடவடிக்கை"

    • விவசாய நிலத்தில் மழைநீர் தேங்குவதால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
    • கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் கீழ மட்டையான் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பில் கண்மாய் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறு கிறது. இங்கு கன்மாய் கரையில் இருந்து மெயின் ரோடு செல்வதற்கு சிறிய பாலம் அமைக்கப்பட்டது இதன் அருகே உயரம் குறைவாக தடுப்பணை கட்டப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது அந்த தடுப்பணையின் உயரம் மேலும் 3 அடி உயர்த்தப்பட்டது. தற்போது பெய்த கனமழையில் கண்மாயில் தண்ணீர் பெருகியதால் தடுப்பணை வழியாக சிறிதளவே தண்ணீர் செல்கிறது. இதனால் தடுப்பணை பகுதியில் சேரும் தண்ணீர் நிரம்பி அருகில் உள்ள வயல்களுக்கு செல்கிறது. இதனால் வயல்கள் மழை தண்ணீரால் மூழ்கி இருக்கிறது. ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே வயல்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன.

    மேலும் தடுப்பணை பகுதியில் தண்ணீர் நிரம்பினால் மலைப்பட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் தென்கரை கழிவு நீர் வாய்க்காலில் இருந்தும் தண்ணீர் வந்தால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என இந்தப் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

    அவர்கள் மேலும் கூறியதாவது:

    தடுப்பணையின் உயரத்தை அதிகப்படுத்த திட்டமிட்ட போதே வயல்களில் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்படும் என அதிகாரிகளிடம் முறையிடோம். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ள வில்லை என்றும். தற்போது வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே மாவட்ட கலெக்டர் இந்த தடுப்பணையையும், நீரில் மூழ்கிய விவசாய நிலங்களையும் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வங்கியில் இருந்து அந்த பணம் பெறப்பட்டு மாணவர்களுக்கு திருப்பி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி, மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலையில் நேற்று 26 மாணவர்களுக்கு ரூ.32 ஆயிரத்து 300 திரும்ப ஒப்படைத்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அலெக்சாண்டர்.

    இவர் கடந்த 3 ஆண்டுகளாக அரசு பள்ளி மேம்பாட்டு பணி மற்றும் வளர்ச்சிப்பணிகள் என்றும், தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் ரூ.5 லட்சம் கட்டாய நிதி வசூல் செய்தார்.

    இந்த பணத்தை அவர் மோசடி செய்ததாக கடந்த 20-ந்தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், முந்தைய தலைமை ஆசிரியர் கட்டாய வசூல் செய்த பணத்தை மாணவர்களிடமே திருப்பி வழங்க மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, வங்கியில் இருந்து அந்த பணம் பெறப்பட்டு மாணவர்களுக்கு திருப்பி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி, மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலையில் நேற்று 26 மாணவர்களுக்கு ரூ.32 ஆயிரத்து 300 திரும்ப ஒப்படைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் பிரபாகர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சக்திவேல், சமத்துவபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலப்பா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளியின் மேலாண்மைக்குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாரப்ப நாயக்கன்பட்டி, பொம்மட்டி போளையம் பள்ளி வழியாக இன்று பேருந்து இயக்கப்பட்டது.
    • இந்த பேருந்தை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கரும்பு மற்றும் மாலை உள்ளிட்ட தோரண அலங்காரத்துடன் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி-அரூர் தேசிய நெடுஞ்சாலையில், செல்லும் வழியில் உள்ள கோபிநாதம்பட்டி கூட்டுரோடு சாலையில் இருந்து போளையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாரப்பநாயக்கன்பட்டி, போளையம்பள்ளி, பொம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராம வாசிகளுக்கு பிரதான தொழில் விவசாயம். காய்கறி, பூ, கீரை போன்றவை, இங்கு பயிரிடப்பட்டு உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து, பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லுாரி செல்ல, கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டும்.

    அதுமட்டுமின்றி குறிப்பாக 11 மற்றும் 12 வகுப்பு படிக்கக் கூடிய மாணவ மாணவிகள் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள R.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் நடந்தே சென்று படித்து வருகிறார்கள்.

    இதனால் தங்களது வீட்டில் இருந்து காலை 7.30 மணிக்குள் புறப்பட வேண்டியுள்ளதால் சில வீடுகளில் காலையில் உணவு சமைப்பதற்கு காலத்தாமதம் ஆவதால் மாணவ, மாணவிகள் சாப்பிடாமலே பள்ளிக்கு நடந்து சென்று காலையில் நடைபெறு கின்ற பிரார்த்தனை கூட்டத்தில் மயங்கி விழுகின்ற நிலைமையும் அடிக்கடி நிகழ்கிறது.

    எனவே மாலை 5 மணிக்கும், காலை 8 மணியளவில் அரசு பேருந்து ஒன்றை (நவலை, சின்னாகவுண்டம்பட்டி, பொம்பட்டி, போளையம்பள்ளி, கோபிநாதம்பட்டி வழியாக தருமபுரி செல்லும் வகையில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு வழங்கினர்.

    எனவே பள்ளி மாணவர்களுக்கு சில நாட்களில் பொது தேர்வு நடைபெற உள்ளதால் அதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்தனர்.

    இதுபற்றி மாலை மலர் நாளிதழில் கடந்த 21-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இன்று தருமபுரி- மொரப்பூர் சாலை ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில் இருந்து மாரப்ப நாயக்கன்பட்டி, பொம்மட்டி போளையம் பள்ளி வழியாக இன்று பேருந்து இயக்கப்பட்டது.

    இந்த பேருந்தை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கரும்பு மற்றும் மாலை உள்ளிட்ட தோரண அலங்காரத்துடன் பட்டாசு வெடித்து வரவேற்றனர். மேலும் பேருந்து இயக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் சாந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

    ×