search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலயம்"

    • பக்தர்கள் கஞ்சி கலயத்தை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
    • கஞ்சி கலயத்தை அம்மனுக்கு படைத்து பாலாபிஷேகம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் 10-ம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி கலயம் எடுக்கும் விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் ஆழ்வார் மண்டபத்தில் இருந்து கஞ்சி கலயத்தை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர், வார வழிபாட்டு மன்றத்தில் கஞ்சி கலயத்தை வைத்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவ- மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், நோயற்ற வாழ்வு வாழ வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    பின், அவரவர் தலையில் மண்பானையை வைத்து சுமந்து வந்து கஞ்சி கலயத்தை அம்மனுக்கு படைத்து பாலாபிஷேகம் செய்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை மன்ற தலைவி கிருஷ்ணம்மாள் மற்றும் செவ்வாடை தொண்டர்கள் செய்தி ருந்தனர்.

    பின்னர், பக்தர்கள் அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • சங்ககிரி வழிபாட்டு மன்றத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், ஏராளமான பெண்கள் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து வந்தனர்.
    • பின்னர் கலயத்திலிருந்த கஞ்சியை பெரிய பாத்திரத்தில் ஊற்றி, மக்களுக்கு வழங்கினர்.

    சங்ககிரி:

    சங்ககிரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில், உலக அமைதி, மழைவளம், விவசாயம் செழிப்படைய, ஆடிப்பூர கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம் நடந்தது. சங்ககிரி வழிபாட்டு மன்றத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், ஏராளமான பெண்கள் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து வந்தனர்.

    ஊர்வலம் சங்ககிரி மலையடிவாரம் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து, சந்தைப்பேட்டை, புதிய எடப்பாடி சாலை வழியாக, ஊர்வலம் சென்று, பவானி சாலையில் உள்ள கோவிலை அடைந்தது. இதில், விழாப்பொறுப்பாளர் ராமசாமி உட்பட, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, சாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.

    பின்னர் கலயத்திலிருந்த கஞ்சியை பெரிய பாத்திரத்தில் ஊற்றி, மக்களுக்கு வழங்கினர்.

    ×