search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பமாக்கிய"

    • நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் -1 படித்து வருகிறார்.
    • அவர் கடந்த சில நாட்க ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

    நாகர்கோவில் : நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் -1 படித்து வருகிறார்.

    அவர் கடந்த சில நாட்க ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் பெற்றோர் அவரை பரிசோத னைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி கரு வுற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி மாணவியின் பெற்றோ ரிடம் தெரிவித்தனர். மகள் 8 மாதம் கர்ப்ப மாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதை கேட்டு அவர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

    கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்று பெற்றோர் விசாரித்த போது, மாணவி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் -2 மாணவர் ஒருவர் வீட்டிற்கு வரும்போது பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனிமை யில் உல்லாசமாக இருந்த தாகவும் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மகளிர் போலீ சில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.பின்னர் சம்பந்தப்பட்ட பிளஸ்-2 மாணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து பிளஸ்-2 மாணவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர், மாணவியை காதலித்து வரு வதாக கூறினார்.

    இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனிமையில் உல்லாசமாக இருந்த தகவலையும் தெரிவித்தார்.இதற்கிடையில் கர்ப்பிணி யாக உள்ள மாணவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் அனுமதித்து உள்ளனர்.

    • முதியவர் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னூர்,

    கோவை அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டின் அருகே செல்வராஜ் (வயது 55) என்பவர் குடியிருந்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் இவர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவரிடம் பேசி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட செல்வராஜ், மாணவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்ட அவர் மாணவியை மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி சென்றார்.

    இதனால் பயந்து போன மாணவி இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட முதியவர், மாணவியிடம் இதுபோன்று 3 முறை அத்துமீறி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி தனது பெற்றோருடன் கேரளாவுக்கு சென்று விட்டார். கடந்த சில தினங்களாக மாணவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

    இதையடுத்து அவரது தாயார் கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.

    அப்போது அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியான தாய், மாணவியிடம் விசாரித்தார்.

    மாணவி தனக்கு நடந்த அவலங்களை தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். உடனே மாணவியின் தாய் சம்பவம் குறித்து அன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி விட்டு இந்த வழக்கினை மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×