search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி"

    கர்நாடகாவில் ராம்நகர் தொகுதியில் மத சார்பற்ற குமாரசாமியின் மனைவி அனிதாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. #AnithaKumaraswamy
    பெங்களூர்:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில், மதசார் பற்ற ஜனதாதள மாநில தலைவர் குமாரசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

    அவர் நின்ற செனப்பட்டனா, ராம்நகர் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரி ஆனார்.

    இதையடுத்து ராம்நகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இந்தநிலையில் ஜம்கண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.சிந்துநியாமகவுடா விபத்தில் மரணம் அடைந்தார்.

    தற்போது காலியாக உள்ள ராம்நகர், ஜம்கண்டி ஆகிய தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது.

    இந்த தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஜம்கண்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ராம்நகர் தொகுதியில் மத சார்பற்ற குமாரசாமியின் மனைவி அனிதாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

    இதை அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, ராம்நகர் தொகுதியில் அனிதா போட்டியிடுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #AnithaKumaraswamy
    காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டியதாக குமாரசாமி தெரிவித்தார். #CauveryIssue #Kumaraswamy
    திருமலை:

    கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை வந்தனர். அவர்களை, தேவஸ்தான அதிகாரிகள் மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

    சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு ஏழுமலையானை முதல்வர் குமாரசாமியும், தேவேகவுடாவும் தரிசனம் செய்துவிட்டு கொடி மரத்தை தொட்டு வணங்கினர். இரவு விடுதியில் தங்கி ஓய்வெடுத்தனர்.

    இன்று காலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை மீண்டும் தரிசனம் செய்தனர். பிறகு, கோவில் வளாகத்தில் முதல்வர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


    காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ, நீதிமன்றத்தின் மூலமாகவோ தீர்வு காண முடியாது. தமிழக அரசியல் தலைவர்கள், காவிரி பிரச்சனையில் சுமூக தீர்வுகாண முன்வர வேண்டும்.

    இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டினேன்.

    மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழக மக்களுக்கு தான் நன்மை ஏற்படும். இதன் மூலம் காவிரி நீர் கடலில் வீணாகுவதை தடுக்க முடியும். மேலாண்மை வாரியம், அரசியல் சாசனம் மூலம் காவிரி பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது.

    காவிரி பிரச்சனையில் இயற்கை ஒத்துழைக்காவிட்டால் பிரச்சனைதான் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக அரசியல் வாதிகளுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று குமாரசாமி பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   #CauveryIssue #Kumaraswamy
    கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீரை தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்று நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமி இன்று உத்தரவிட்டு உள்ளார்.
    பெங்களூரு:

    காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இதில் மைசூரு, மாண்டி மாவட்ட விவசாயிகளுக்கு போக 40 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீரை தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்று நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமி இன்று உத்தரவிட்டு உள்ளார்.

    ஆனால் எவ்வளவு நீர் திறக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவிக்கவில்லை. என்றாலும் இன்று மாலை முதல் மேலும் நீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #CauveryWater #Cauveryissue
    ×