search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருகலைப்பு"

    • அங்கீகரிக்கப்படாத அல்ட்ரா ஸ்கேனிங் எந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது.
    • விசாரணை மேற்கொண்டதில் இந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டில் சட்டவிரோதமாக 9 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சட்ட விரோதமாக கருக்கலைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தது.

    இதைதொடர்ந்து மாவட்ட நோடல் அதிகாரி டாக்டர் மஞ்சுநாத் கடந்த 5-ந் தேதி சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் நோய் கண்டறியும் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கீகரிக்கப்படாத அல்ட்ரா ஸ்கேனிங் எந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது.

    மேலும் மருத்துவமனையின் குப்பைத் தொட்டியில் பெண் கரு ஒன்று கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் இந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டில் சட்டவிரோதமாக 9 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

    இதுகுறித்து மாவட்ட நோடல் அதிகாரி டாக்டர் மஞ்சுநாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாலின நிர்ணயம் மற்றும் சட்ட விரோத கருக்கலைப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் 2 செவிலியர்கள், 1 லேப் டெக்னீஷியன் மற்றும் 1 துப்புரவு பணியாளர் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கருகலைப்பு செய்யக் கூடாது என எச்சரிக்கை
    • அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறியதாவது:-

    பாலினம் ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்வது நமது மாவட்டத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் எங்களுக்கு புகார் வரும் போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நமது மாவட்டத்தில் உள்ள மையங்களுக்கு வருகின்ற தாய்மார்களுக்கு நமது மருத்துவர்கள் கண்டிப்பாக ஸ்கேன் செய்யக்கூடாது.

    நமது மாவட்டத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 944 பெண் குழந்தைகளே இருப்பதால் இனி வரும் காலங்களில் கருகலைப்பு போன்ற நிகழ்வு நடைபெற்றால் பெரும் சட்ட சிக்கல்கள் ஏற்படும்.

    அனைத்து மருத்துவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் . அவர்கள் பராமரிக்கின்ற அனைத்து பதிவேடுகளையும் சரியான உரிய முறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

    தாய்மார்களுடைய பதிவேடுகளில் அவருடைய அனைத்து தகவல்களும் தவறாமல் இடம் பெற வேண்டும் அதில் பெயர் மட்டும் பதிவு செய்ய கூடாது.

    இனிவரும் காலங்களில் விதி விதிமீறல் சற்றும் இருக்கக் கூடாது ஆய்வு மேற்கொண்டு மீறலில் செயல்படும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×