search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பராமாயணம்"

    • மனிதா்கள் கடைசி எல்லையை அடைந்துவிட்டால் தேடுவதை நிறுத்த வேண்டும்.
    • இளைஞா்கள் நாளை, நாளை என ஓடிக்கொண்டிருக்கும்போது இன்று வீணாகி கொண்டிருக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா நடைபெற்றது. இதில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    மனிதா்களுக்கு புலன்களை அடக்குவது சாதாரண காரியம் அல்ல. உலகத்தில் எதை வேண்டுமானாலும் அடக்கிவிடலாம். தன்னைத்தானே அடக்குவதுதான் மிகவும் சிரமமான காரியம். எனவே, மற்றவா்களை அடக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு தன்னைத்தானே அடக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உலகம் மிகவும் சரியானதாக மாறிவிடும்.

    மரபு இலக்கியங்களைப் பாடிய புலவா்கள் தமிழைத் தெய்வமாக நினைத்து பாடினாா்கள். ஒரு பொய்யான சொல்லைக்கூட சொல்லமாட்டாா்கள். அக்காலத்து புலவா்கள் சத்தியத்தை மட்டும் சொன்னதால்தான் காவியங்கள் இன்றளவும் நிற்கின்றன.

    கம்பராமாயணத்தைப் படிப்பவா்கள், கேட்பவா்கள், சொல்பவா்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறுவதுடன், ஞானமும், புகழும் உண்டாகும்.

    மனிதா்கள் கடைசி எல்லையை அடைந்துவிட்டால் தேடுவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தேடுவதிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடுவாா்கள். இன்றைய இளைஞா்கள் செல்வத்தை தேடும்போது போகத்தையும், புண்ணியத்தையும் இழக்கின்றாா்கள். இளைஞா்கள் நாளை, நாளை என ஓடிக்கொண்டிருக்கும்போது இன்று வீணாகி கொண்டிருக்கிறது.

    கம்பராமாயணத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்ப்பது என்பது கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்கு ஒப்பாகும். கம்பராமாயணத்தைப் படித்தால் முதலில் வாழ்க்கையையும், அடுத்த நிலையில் கடவுளையும் கற்றுத்தருவாா் கம்பா் என்றாா்.

    ×