என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி வீரர் கொலை"

    • நள்ளிரவு நேரத்தில் நடந்த இக்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உரங்கான்பட்டியை அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்களும் இருந்தனர்.

    இதில் மூத்த மகன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் சத்தியமூர்த்தி (வயது 27) என்பவரும் வௌிநாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார்.

    சத்தியமூர்த்தி விளையாட்டு, மஞ்சு விரட்டு, கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் பல்வேறு ஊர்களில் நடந்த பந்தயங்களில் அவர் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளையும் வென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு சத்தியமூர்த்தி வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சத்தியமூர்த்தி அவர்களை பார்த்ததும் பதட்டம் அடைந்தார். பின்னர் அவர் உடனே வீட்டுக்குள் சென்று தப்ப முயன்றார்.

    ஆனால் சுதாரித்துக் கொண்டு சுற்றி வளைத்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தியை துரத்தி சென்று பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வீட்டின் வெளியே மகனின் அலறல் சத்தம் கேட்டு கதவை திறந்து வந்த தாய் மல்லிகா, சத்தியமூர்த்தி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி மற்றும் கீழவளவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சத்தியமூர்த்தியை கொன்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். போட்டிகளில் பங்கேற்கும் போது ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இக்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹர்தீப் சிங்கை மீட்டு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • கபடி வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் தில்வான் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப் சிங்(வயது 22). கபடி வீரரான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் வந்தனர்.

    திடீரென்று ஹர்தீப் சிங்கை சரமாரியாக வெட்டினர். பின்னர் அவரது உடல் பாகங்களை வெளியில் வீசிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹர்தீப் சிங்கை மீட்டு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வழியிலேயே ஹர்தீப் சிங் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தில்வான் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கபடி வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×