search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பஞ்சாப்பில் கபடி வீரர் வெட்டிக்கொலை
    X

    பஞ்சாப்பில் கபடி வீரர் வெட்டிக்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹர்தீப் சிங்கை மீட்டு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • கபடி வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் தில்வான் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப் சிங்(வயது 22). கபடி வீரரான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் வந்தனர்.

    திடீரென்று ஹர்தீப் சிங்கை சரமாரியாக வெட்டினர். பின்னர் அவரது உடல் பாகங்களை வெளியில் வீசிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹர்தீப் சிங்கை மீட்டு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வழியிலேயே ஹர்தீப் சிங் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தில்வான் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கபடி வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×