என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kabaddi player murder
நீங்கள் தேடியது "Kabaddi Player Murder"
- போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹர்தீப் சிங்கை மீட்டு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- கபடி வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் தில்வான் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப் சிங்(வயது 22). கபடி வீரரான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் வந்தனர்.
திடீரென்று ஹர்தீப் சிங்கை சரமாரியாக வெட்டினர். பின்னர் அவரது உடல் பாகங்களை வெளியில் வீசிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹர்தீப் சிங்கை மீட்டு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே ஹர்தீப் சிங் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தில்வான் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கபடி வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
