search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தியை காட்டி"

    • வாலிபர்கள் சுரேஷ்குமாரை தடுத்து நிறுத்தி மது குடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு, அக். 15-

    ஈரோடு பெரியவலசு வள்ளியம்மை முதல் வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (49). தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று அவரது நண்பர் சுப்பிரமணி என்பவருடன் ஈரோடு சூளை டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் சுரேஷ்குமாரை தடுத்து நிறுத்தி மது குடிக்க பணம் கேட்டு சிறிய கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

    ஆனால் சுரேஷ்குமார் பணம் தர மறுத்து கூச்சல்போட்டதால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சுரேஷ்குமார் வீரப்பன்சத்திரம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியது ஈரோடு நாராயணவலசு திருமால் நகரை சேர்ந்த முருகன் மகன் ரவி (23), மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சண்முகம் மகன் லோகேஸ்வரன் (19) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.

    • தனியார் பஸ் டிரைவர் நம்பியூர் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பரணிதரனை கைது செய்தனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள புது சூரிபாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் பரணிதரன் (வயது 39). இவர் தனியார் கம்பெனியில் மெக்கானி க்காக பணிபுரிந்து வரு கிறார்.

    இவர் வேலைக்கு சென்று விட்டு அவினாசியில் இரு ந்து நம்பியூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அப்போது அந்தி யூரில் இருந்து கோவைக்கு ஒரு தனியார் பஸ் வந்தது.

    அந்த பஸ் பரணிதரன் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை ஒட்டியபடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பரணி தரன் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார். இதையடுத்து அவர் மொட்ட ணம் அருகே அந்த தனியார் பஸ்சை நிறுத்தினார்.

    இதில் பரணி தரனுக்கும், டிரைவர் மற்றும் கண்டக்டர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பரணிதரன் நான் அடிபட்டு இறந்தால் எனது குடும்பத்தை யார் காப்பாற்றுவது இனிமேல் இது போல் செய்தீர்கள் என பஸ் டிரைவரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பரணிதரன் தான் வைத்து இருந்த கத்தியை எடுத்து டிரைவர் மற்றும் டிரைவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தனியார் பஸ் டிரைவர் நம்பியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பரணிதரனை கைது செய்தனர்.

    இதையடுத்து அவரை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் அவரை கோபி செட்டிபாளையம் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

    • காங்கேயம் பகுதியில் சுப்பிரமணியம் ஆட்டு வியாபாரத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
    • அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சுப்பிரமணியமிடம் விஜயமங்கலத்திற்கு செல்லும் வழியை கேட்டுள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ளது தோப்புப்பாளையம். இப்பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியம் (57 ). இவர் ஆட்டு வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் நேற்று காங்கேயம் பகுதியில் ஆட்டு வியாபாரத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது தோப்பு ப்பாளையம் அருகில் உள்ள மலைக்கணுவாய் பகுதியில் ரோட்டில் தனியே வந்த பொழுது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சுப்பிரமணியமிடம் விஜயமங்கலத்திற்கு செல்லும் வழியை கேட்டுள்ளனர்.

    அவர்களுக்கு சுப்பிரமணியம் வழி சொன்ன பிறகு மொபட்டில் சென்றவரை அந்த நபர்கள் இருவரும் தடுத்து ஒருவர் செல்போனை பறித்து கொண்டார்.

    மற்றொரு நபர் கத்தியை காட்டி இவரை மிரட்டி சட்டை பையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து சென்றார்.கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் இரு வரும் பைக்கில் வேகமாக சென்று விட்டனர்.

    இதனையடுத்து இந்த வழிப்பறி சம்பவம் குறித்து சுப்பிரமணியம் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து, வழிப்பறி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.

    • குருமூர்த்தி திடீரென ஜீவிதாவின் கழுத்தை பிடித்து கத்தியை காட்டி காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க கம்மலை பறித்து கொண்டார்.
    • இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி சாரணர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜீவிதா (28). மணிகண்டன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மணிகண்டன் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். ஜீவிதா வீட்டில் குழந்தைகளுடன் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு திங்களூர் ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த உறவினர் குருமூர்த்தி (32) என்பவர் திடீரென வந்தார்.

    பின்னர் குருமூர்த்தி திடீரென ஜீவிதாவின் கழுத்தை பிடித்து கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி ஜீவிதாவை கீழே தள்ளி விட்டு காலால் எட்டி உதைத்து அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க கம்மலை பறித்து கொண்டார்.

    வலி தாங்க முடியாமல் ஜீவிதா அலற அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அவர்களையும் குருமூர்த்தி தாக்கினார். இதைனயடுத்து பொது மக்கள் ஒன்று சேர்ந்து குர்மூர்த்தியை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் குருமூர்த்தியை பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர். 

    • கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் சென்னிமலை நாமக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) என தெரியவந்தது.
    • இதனையடுத்து போலீசார் சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    ஒரிசா மாநிலம் கௌவூர் பத்ரக் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் தாஸ் (வயது 30). இவர் தற்போது பெருந்துறையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை அஜித்குமார் தாஸ் பெருந்துறை செல்வதற்காக பணிக்கம்பாளையம் ரவுண்டனா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கத்தியை காட்டி, நான் யார் தெரியுமா எனது பெயர் சுரேஷ், இந்த ஊரிலேயே பெரிய ரவுடி நான்தான், ஒழுங்கா உன்கிட்ட இருக்கிற பணத்தை எடு என மிரட்டி உள்ளார்.

    பின்னர் அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு உடனடியாக அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார். உடனே அஜித்குமார்தாஸ் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் சென்னிமலை நாமக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) என தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×