கத்தியை காட்டி மிரட்டிய மெக்கானிக் கைது

தனியார் பஸ் டிரைவர் நம்பியூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து பரணிதரனை கைது செய்தனர்.
கத்தியை காட்டி மிரட்டிய மெக்கானிக் கைது
Published on

நம்பியூர்:

நம்பியூர் அருகே உள்ள புது சூரிபாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் பரணிதரன் (வயது 39). இவர் தனியார் கம்பெனியில் மெக்கானி க்காக பணிபுரிந்து வரு கிறார்.

இவர் வேலைக்கு சென்று விட்டு அவினாசியில் இரு ந்து நம்பியூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அப்போது அந்தி யூரில் இருந்து கோவைக்கு ஒரு தனியார் பஸ் வந்தது.

அந்த பஸ் பரணிதரன் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை ஒட்டியபடி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பரணி தரன் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார். இதையடுத்து அவர் மொட்ட ணம் அருகே அந்த தனியார் பஸ்சை நிறுத்தினார்.

இதில் பரணி தரனுக்கும், டிரைவர் மற்றும் கண்டக்டர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பரணிதரன் நான் அடிபட்டு இறந்தால் எனது குடும்பத்தை யார் காப்பாற்றுவது இனிமேல் இது போல் செய்தீர்கள் என பஸ் டிரைவரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பரணிதரன் தான் வைத்து இருந்த கத்தியை எடுத்து டிரைவர் மற்றும் டிரைவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தனியார் பஸ் டிரைவர் நம்பியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பரணிதரனை கைது செய்தனர்.

இதையடுத்து அவரை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் அவரை கோபி செட்டிபாளையம் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com