search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் வாக்குமூலம்"

    மிரட்டியும் கள்ளக்காதலை மனைவி கைவிடாததால் தலைதுண்டித்து கொலை செய்தேன் என்று கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே மேட்டுக்கடையில் வசித்தவர் முனியப்பன் (வயது 28) இவரது மனைவி நிவேதா(19), இருவரும் கடந்த 8 மாதத்துக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் மேட்டுக்கடையில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து 2 பேருமே வேலைக்கு போய் வந்தனர்.

    இளம்பெண் நிவேதாவுக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் செல்போனில் அவர்களுடன் பேசி வந்தார். இதைகண்ட கணவர் முனியப்பன் ஆத்திரம் அடைந்தார். “நமக்கு திருமணமாகிவிட்டது. மற்ற ஆண்களுடன் பேசுவதை பழகுவதை விட்டுவிடு” என்று சத்தமும் போட்டார். ஆனால் நிவேதா இதை கேட்டதாக தெரியவில்லை.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் நிவேதா ஒன்றாக இருந்ததை நேரில்கண்டு முனியப்பன் கடும் ஆத்திரம் அடைந்தார். இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டது.

    இந்த வீட்டில் இருந்தால் மனைவியின் கள்ளக் காதலர்கள் மீண்டும் வரக் கூடும் என எண்ணிய முனியப்பன் அந்த வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு குடியிருக்க திட்டமிட்டார்.

    இதனால் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வீடுபார்க்க சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த முனியப்பன் மனைவியை அடித்து உதைத்தார். இருவரும் மாறி... மாறி... தாக்கினர். பிறகு முனியப்பன் ஆத்திரத்தில் கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்து துண்டித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    மனைவியின் பிணத்தை மறைக்க மோட்டார் சைக்கிளில் துண்டித்த தலை மற்றும் உடலை எடுத்து சென்ற போது பொதுமக்களிடம் சிக்கினார். பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் அவரை கைது செய்தார்.

    போலீசாரிடம் கொலையாளி முனியப்பன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    இதில் “நானும் நிவேதாவும் காதல் திருமணம் செய்து கொண்டோம். சந்தோ‌ஷமாகத்தான் வாழ்ந்தோம். அப்போதுதான் என் மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் இருந்ததை கண்டேன். மேலும் பல ஆண்களுடன் போனில் பேசியதையும் கண்டேன்.

    இதனால் அவளை பல தடவை கண்டித்தேன். ஆனால் அவள் என்பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டாள். அவளை நான் மிரட்டியும் பார்த்தேன். அப்படியும் கேட்டகவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். தப்ப முயன்ற போது சிக்கி கொண்டேன்” என்று கூறினார். 

    காட்டுமன்னார்கோவில் அருகே சொத்தை எழுதி தராததால் மனைவியை தீர்த்துகட்டினேன் என்று கைதான கணவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி காலை வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் பிணமாக கிடந்தார்.

    அப்போது அங்கு வந்த உமாராணியின் அண்ணன் உமாசங்கர், தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக குமராட்சி போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, இறுதிசடங்கை தடுத்து நிறுத்தி உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சந்தேக மரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்தனர்.

    பிரேத பரிசோதனையில் உமாராணியின் தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அவரை யாரோ அடித்து கொலை செய்து இருக்கிறார்கள் என்பதை போலீசார் உறுதிசெய்தனர். தொடர்ந்து இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் செல்வராஜ் மேலவன்னியூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனிடம் சரணடைந்தார். அப்போது அவர், தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், அவர் குமராட்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து செல்வராஜை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது செல்வராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த நான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். தொடர்ந்து எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் உமாராணி, விவாகரத்து கேட்டு விருத்தாசலம் கோர்ட்டில் மனு செய்தார். அதில் எங்களிடம் சமரசம் செய்து குடும்பம் நடத்த அறிவுறுத்தினர். இதேபோல் குமராட்சி போலீஸ் நிலையத்திலும் குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு உள்ளது.

    உமாராணி பெயரில் உள்ள சொத்துகளை எனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு கூறினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்தேன்.

    விவசாய நிலத்தில் நின்று கொண்டிருந்த உமாராணியின் தலையில் கத்தியால் குத்தினேன். பின்னர் அவரை வாய்க்காலில் தள்ளிவிட்டு கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாததுபோல் நாடகமாடினேன். இருப்பினும் போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டதை அறிந்து, கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராயக்கோட்டை அருகே மது குடிக்க பணம் தரமறுத்ததால் மனைவியை வெட்டி கொலை செய்தேன் என்று போலீசாரிடம் கைதான கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ளது நார்ப்பனட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சீனப்பா (வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பத்மா (38). இவர்களுக்கு ஷில்பா என்ற மகளும், வெங்கடேஷ் என்கிற சித்தேஷ் என்ற மகனும் உள்ளனர்.

    சீனப்பா வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்தார். மேலும் மது குடித்து விட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தார். சித்தேஷ் வேலைக்கு சென்று சேர்த்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை தனது சகோதரி ஷில்பாவிடம் கொடுத்து வைத்திருந்தார். சீனப்பா மது குடித்து விட்டு அந்த தொகையை அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு சீனப்பா வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு பத்மா தூங்க சென்றுவிட்டார்.

    மதுகுடிக்க பணம் தரமறுத்ததால் ஆத்திரம் அடைந்த சீனப்பா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தூங்கி கொண்டிருந்த பத்மாவின் தலை, கழுத்து மற்றும் கைகளில் வெட்டினார். வலியால் அலறிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அப்போது வீட்டில் இருந்த அவரது மகன், மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    உடனே சீனப்பா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அதற்குள் அவர்கள் சீனப்பாவை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரிடம் கொலையாளி சீனப்பாவை ஒப்படைத்தனர்.

    பின்னர் அவர்கள் கொலையுண்ட பத்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பத்மாவின் சகோதரி லலிதா கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்டபாக சீனப்பாவிடம் போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தேன். எனக்கு குடிப்பழக்கம் உள்ளதால் தினமும் குடிக்க பணம் கேட்டு எனது மனைவியிடம் தகராறு செய்து வந்தேன்.

    இந்த நிலையில் எனது மகன் சித்தேஷ் சேர்த்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை அவரது தாய் பத்மாவிடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டேன். இதில் ஆத்திரம் அடைந்த நான் மனைவி பத்மாவை கொன்று விடுவது என்று முடிவு செய்து அவர் தூங்கி கொண்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முதலில் தலையில் வெட்டினேன். பின்பு கழுத்து மற்றும் கைகளில் வெட்டினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். உடனே அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது உறவினர்களும், ஊர்க்காரர்களும் பிடித்து கொண்டனர். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரை தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×