search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் மனைவி தற்கொலை"

    • இன்று காலை வீட்டிற்கு வந்தவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
    • கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பரமசிவம் (72), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (62). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

    இவர்களது மகள் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்து விட்டார். 2 மகன்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பரமசிவம் மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

    இந்நிலையில் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். பஞ்சவர்ணத்திற்கு சர்க்கரை நோய் இருந்ததால் அவரது இருவிரல்கள் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2 விரல்களையும் நீக்கி விட்டனர். இதனால் வலியால் தவித்து வந்துள்ளார்.

    பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லையே என பரமசிவம்-பஞ்சவர்ணம் தம்பதியினர் விரக்தியில் இருந்துள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கணவன், மனைவி இருவரும் விட்டத்தில் பஞ்சவர்ணத்தின் சேலையால் தனித்தனியாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை வீட்டிற்கு வந்தவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டு இருவரின் உடல்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடல்நிலை சரியாகாத விரக்தியில் கணவன், மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • தற்கொலை செய்த மோகன்பாபு தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
    • தற்கொலை செய்த மோகன்பாபு, ஜெயந்தி தம்பதியர் தற்கொலை செய்த அறையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    சேலம்:

    கோவை மாவட்டம், பீளமேடு கோபால் நகரைச் சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 57). இவரது மனைவி ஜெயந்தி (50). இவர்கள் கடந்த 11-ந் தேதி சேலம் வந்தனர்.

    சேலம் சினிமா நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அறையில் இருந்து அவர்கள் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர்கள் பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் நேற்று இரவு விடுதிக்கு சென்று, அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஹாலில் உள்ள மின்விசிறியில் ஜெயந்தி தூக்கில் சடலமாக கிடந்தார். மோகன்பாபு குளியலறையில் தூக்கில் தொங்கினார்.

    இதையடுத்து போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

    தற்கொலை செய்த மோகன்பாபு தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மோகன் பாபு ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டு வந்தார்.

    இதில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால், கடந்த 5-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, தம்பதியினர் இருவரும் மாயமாகி விட்டனர்.

    இதையறிந்த மோகன்பாபுவின் மகள்கள் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடினர். இது தொடர்பாக பிளேமேடு போலீசில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அதன். பேரில், பீளமேடு போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், தம்பதி இருவரும் சேலத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    தற்கொலை செய்த மோகன்பாபு, ஜெயந்தி தம்பதியர் தற்கொலை செய்த அறையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அந்த கடிதத்தில் ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் வாங்கி 90 சதவீதம் கடனை கட்டி விட்டோம்.

    இருப்பினும் கடன் தொல்லையால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டோம். எங்களது சாவுக்கு நாங்களே காரணம்,' என எழுதி இருந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோகன்பாபு தனது மனைவியுடன் சேலம் வந்தார்.
    • சினிமா நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

    சேலம்:

    கோவை பீளமேடு கோபால்நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 57). இவருடைய மனைவி ஜெயந்தி (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மோகன்பாபு பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில், மோகன்பாபு தனது மனைவியுடன் சேலம் வந்தார். அங்கு புதிய பஸ் நிலையம் அருகே சினிமா நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்தநிலையில், இருவரும் திடீரென தங்கும் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    போலீஸ் விசாரணையில், பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை ஏற்பட்டதாகவும், இதனால் விரக்தி அடைந்த மோகன்பாபு, தனது மனைவியுடன் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டது தெரிய வந்தது.

    ×