search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலோர பாதுகாப்பு ஒத்திகை"

    • கடலோர பாதுகாப்பு படையினராலும், கடலோர பாதுகாப்பு குழுமத்தினராலும் படகுகள் சோதனையிடப்படும்.
    • கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்துகின்றனா்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதியில் சஜாக் என்னும் பயங்கரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை இந்திய கடலோர காவல் படையினரால் தொடங்கியது.

    மாராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்தினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பலியாகினா். இதைத் தொடா்ந்து, கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும், மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்திய கடல்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவு வலை தடுப்பதற்கும், பாதுகாப்பினை பலப்படுத்திடவும் இந்திய கடலோர காவல்படையினரால் இன்று (20-ந் தேதி) காலை சஜாக் என்ற பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கி,இரவு 8 மணி வரை பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

    ஒத்திகையின்போது சந்தேகத்திற்கிடமான நபர்கள், அந்நியர்கள் படகுகளின் நடமாட்டம் குறித்து விபரத்தினை உடனடியாக தெரிவித்திடுமாறு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் இருந்து மீனவ சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் கடலோர பாதுகாப்பு படையினராலும், கடலோர பாதுகாப்பு குழுமத்தினராலும் படகுகள் சோதனையிடப்படும் என்பதால் அசல் அடையாள அட்டைகள் மற்றும் படகு தொடர்பான ஆவணங்களை மீன்பிடிக்கச் செல்லும் போது உடன் எடுத்துச் செல்ல மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பாதுகாப்பு ஒத்திகையில் இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்துகின்றனா். இதை முன்னிட்டு ராமநாதபுர மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடல் பகுதி முழுவதையும் இந்திய கடலோர காவல்படை தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா்.

    ×