search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன்உதவி"

    • சிவகங்கையில் ரூ.1,216 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட அளவிலான தொழில் கடன் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 1 லட்சத்து 20 ஆயிரத்து 791 பயனாளி களுக்கு ரூ.1216.63 கோடி மதிப்பிலான வங்கி கடன் அனுமதி மற்றும் வங்கி கடன் பட்டுவாடாவுக்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதா வது:-

    தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறந்த விளங்க வேண்டும் என்ற அடிப்படை யில் முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் திடும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2022-2023 முதல் 143 பயனாளிகளுக்கு 13.10 கோடி அளவில் வங்கி மூலம் கடனுதவி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டிற்கு (2023-24) 210 பயனாளி களுக்கு 20.13 கோடி கடனுதவி செய்து தருவ தற்கும் இலக்கு நிர்ண யிக்கப்பட்டது.

    இதுதவிர மேற்காணும் திட்டங்களில் வியாபார தொழில்கள், உற்பத்தித் தொழில்கள் மற்றும் சேவை தொழில்கள் செய்வதற்கும் மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பித்து வங்கி கடனுதவிகள், அரசின் மானியத்துடன் அதிகபட்சம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்று சிறு-குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அர சால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ் வாதாரத்தினை மேம் படுத்தி்க் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜுனு மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 119 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.45.66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
    • வேலைவாய்ப்பை அதிகரிப்பதே மாவட்ட தொழில் மையத்தின் பிரதான நோக்கம்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் 1,448 பயனாளிகளுக்கு ரூ.417.66 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினாா்.

    பின்னா் அவா் பேசியதாவது:-

    தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். அந்தந்த மாவட்டகளில் உள்ள தொழில்களை வளா்ப்பதற்கும், புதிய தொழில்முனைவோா்களை உருவாக்குவதற்கும் தேவையான உதவிகள் மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. சிறு, குறு தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே மாவட்ட தொழில் மையத்தின் பிரதான நோக்கம் என்றாா்.

    முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 1,122 பேருக்கு ரூ.385.50 கோடி மதிப்பீட்டிலும், அண்ணல் அம்பேத்கா் முன்னோடிகள் திட்டத்தில் 6 பேருக்கு ரூ.1.87 கோடி மதிப்பீட்டிலும், புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் 6 பேருக்கு ரூ.11.99 கோடி, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 6 பேருக்கு ரூ.47 லட்சம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 65 பயனாளிக்கு ரூ.10.25 கோடி என மொத்தம் 1,448 பயனாளிகளுக்கு ரூ.417.66 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.20.87 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் உட்பட 119 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.45.66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

    இந்நிகழ்ச்சியில் துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட தொழில் மைய மேலாளா் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரவி, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ரஞ்சித்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடன்உதவிகளை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை தொகுதியில் உள்ள திருப்புவனம் பால்உற்பத்தியாளர் சங்கம் அதிக அளவில் பால்கொள்முதல் செய்யும் சங்கமாகும். இந்த சங்கத்திற்கு உட்பட்ட பால்உற்பத்தியாளர்களுக்கு திருப்புவனம் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திருப்புவனம்பேரூராட்சி தலைவரும், பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மானாமதுரை ஒன்றிய குழு துணை தலைவர் மூர்த்தி, பால் உற்பத்தியாளர் சங்க மேலாளர் கிருஷ்ணன் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    ×