search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் ஊழியர்கள்"

    கிறிஸ்டியானா ரொனால்டோ கீரிஸ் நாட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருந்த போது ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ் வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். #CristianoRonaldo
    லண்டன்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி 2-வது சுற்றுடன் வெளியேறியதும் அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் கிரீஸ் நாட்டில் கோஸ்டா நவரினோ என்ற சொகுசு விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்தார். அங்கு தங்கி இருந்த போது ஓட்டல் ஊழியர்களின் உபசரிப்பும், சேவையும் அவருக்கு மிகவும் பிடித்து போனது. இதனால் ஓட்டலை விட்டு கிளம்பும் போது ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் வெகுமதியாக (டிப்ஸ்) வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். காசோலையாக வழங்கிய அவர் அதை ஊழியர்களுக்கு பிரித்து கொடுக்கும்படி ஓட்டல் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார். #CristianoRonaldo
    சென்னை அண்ணாநகர் ரவுண்டானாவில் உள்ள ஓட்டலில் தவறவிட்ட ரூ.25 லட்சத்தை ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
    வில்லிவாக்கம்:

    அண்ணாநகர் ரவுண்டானாவில் சரவண பவன் ஓட்டல் உள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து சாப்பிட்டு சென்றனர்.

    இரவு 10.30 மணியளவில் ஊழியர் ரவி மேஜைகளை கண்காணித்த போது மேஜையில் ஒரு பை கேட்பாரற்று இருந்ததை பார்த்தார். அந்த பையை திறந்து பார்த்த போது அதற்குள் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்தார்.

    உடனடியாக அந்த பையை மானேஜர் பாலுவிடம் ஒப்படைத்தார். இருவரும் ஓட்டல் நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் இன்று காலையில் அந்த பணப்பையை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தனர்.

    பணத்தை கண்டெடுத்ததும் பத்திரமாக ஒப்படைத்த ஊழியர் ரவியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் சரவணன் பாராட்டினார். அவருக்கு கைகடிகாரம் ஒன்றை பரிசளித்தார். ரவியின் சொந்த ஊர் செஞ்சி.

    பணத்துக்கு உரிமை கோரி இதுவரை யாரும் வரவில்லை. உரிமை கோரி வருபவர்களிடம் விசாரணை நடத்தி உரியவரிடம் வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
    ×