search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐடி ஊழியர் தற்கொலை"

    • திருமணமான 100 நாட்களில் ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமான முறையில் தற்கொலை செய்ய காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • சிலிண்டரை இந்துவின் தந்தை திருவேங்கடசாமி டெலிவரி எடுத்துள்ளார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்து (25). இவருக்கும் நல்லகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த விஷ்ணுசாரதிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன்-மனைவி 2 பேரும் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் இந்துவின் பாட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை சந்திக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து தனது கணவர் விஷ்ணுசாரதியுடன் பொலவகாளிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்ற இந்து இரவு 7.30 மணி ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. உறவினர்கள் அவரை எழுப்பியபோது உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. மேலும் அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது முகத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றி டேப் ஒட்டப்பட்டு பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் சிலிண்டரில் இருந்து டியூப் மூலம் வாயில் காற்றை செலுத்தி மூச்சு திணறி தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. சியாமளாதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்து தற்கொலை குறித்து கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினியும் விசாரணை நடத்தினார்.

    திருமணமான 100 நாட்களில் ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமான முறையில் தற்கொலை செய்ய காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் சிலிண்டர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

    அப்போது இந்து சென்னையில் இருக்கும்போதே தற்கொலை செய்ய திட்டமிட்டு பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் சிலிண்டரை ஆன்லைன் மூலம் வாங்கி பொலவகாளிபாளையத் தில் உள்ள தனது தந்தை வீட்டு முகவரிக்கு அனுப்பி உள்ளார்.

    சிலிண்டரை இந்துவின் தந்தை திருவேங்கடசாமி டெலிவரி எடுத்துள்ளார். ஹீலியம் சிலிண்டரை பெற்றுக்கொண்ட அவர் தனது மகளிடம் தொடர்பு கொண்டு இந்த சிலிண்டர் எதற்கு என்று கேட்டுள்ளார். அதற்கு இந்து பலூன் அடிக்க தேவைப்படுகிறது என்று பதில் அளித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டே இந்துமதி ஹீலியம் சிலிண்டரை கொண்டு வந்தது தெரியவந்தது.
    • இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடசாமி. விவசாயி. இவரது மகள் இந்துமதி (25), என்ஜினீயரிங் பட்டதாரி.

    இவருக்கும் நல்ல கவுண்டம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த என்ஜினீரியங் பட்டதாரி விஷ்ணுசாரதி என்பவருக்கும் கடந்த 100 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    பின்னர் விஷ்ணுசாரதியும், இந்துமதியும் சென்னைக்கு சென்று அங்கு ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் இந்துமதியின் பாட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்துமதி தனது கணவர் விஷ்ணுசாரதியுடன் பாட்டியை பார்ப்பதற்காக பொலவ காளிபாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்தார்.

    நேற்று மதியம் வீட்டில் இருந்த இந்துமதி தூங்குவதற்காக தனது வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இந்துமதியை எழுப்பினர்.

    ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து கதவை திறக்க முயன்றபோது உள் பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்த கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இந்துமதி கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    அவர் தனது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு டேப் ஒட்டியுள்ளார். மேலும் பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் சிலிண்டரில் இருந்து டியூப் மூலம் வாயிக்குள் காற்றை செலுத்தி மூச்சு திணறல் ஏற்பட்டு கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்டு பிணமாக கிடப்பது தெரியவந்துது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து கோபி செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு கோபி செட்டிபாளையம் டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டே இந்துமதி ஹீலியம் சிலிண்டரை கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகி நேற்றுடன் 100 நாட்கள் ஆன நிலையில் இந்துமதி தற்கொலை செய்துகொண்டதால் இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினியும் இன்று விசாரணை நடத்துகிறார். அதன் அடிப்படையிலேயே அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.

    திருமணமான 100-வது நாளில் ஐ.டி. கம்பெனி பெண் ஊழியர் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறையினர் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனை பலரும் கண்டு கொள்வதில்லை.
    • இதற்கு உதாரணமாக நெல்லை அருகே, ஆன்லைன் செயலி ஒன்றில் ஒரே நாள் இரவில் ரூ.1 லட்சம் வரை இழந்த ஐ.டி.ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

    நெல்லை:

    ஆன்டிராய்டு செல்போன்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலத்தில், நித்தம் நித்தம் உருவாகும் புது புது செயலிகளில் சில செயலிகள் மோசடிக்கு பயன்படுத்தப்படுகிறது.

    குறிப்பாக இளைஞர்களையும், சிறுவர்களையும் மையப்படுத்திய சில செயலிகள் அவர்களை ஆன்லைனில் அடிமையாக்குவதோடு, லட்சக்கணக்கில் பணத்தையும் கறந்து விடுகிறார்கள்.

    இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறையினர் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனை பலரும் கண்டு கொள்வதில்லை.

    இதற்கு உதாரணமாக நெல்லை அருகே, ஆன்லைன் செயலி ஒன்றில் ஒரே நாள் இரவில் ரூ.1 லட்சம் வரை இழந்த ஐ.டி.ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் தடி ஜெயசூர்யா(வயது 22). பி.டெக். பட்டதாரியான இவர் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இதற்காக நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே பண்டாரகுளத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த நண்பர் ஒருவரும் தங்கி உள்ளார்.

    நேற்று காலை தனது நண்பரை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு, அறைக்கு திரும்பிய ஜெயசூர்யா மாலை 5 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும்.

    ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவரது நண்பர் அவரை தேடி அறைக்கு சென்றார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவஇடத்திற்கு இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    ஜெயசூர்யா தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் அவரது செல்போனுக்கு ஒரு மேசேஜ் வந்ததும், அதில் மாடல் அழகியின் புகைப்படத்தை காட்டி, குறிப்பிட்ட ஒரு செயலியை டவுன்லோடு செய்யுமாறு அழைப்பு வந்ததும் தெரிய வந்தது.

    அந்த செயலியை ஜெயசூர்யா டவுன்லோடு செய்துள்ளார். அதில் ஏராளமான மாடல் அழகிகளின் கிளுகிளுப்பான புகைப்படங்கள் இருந்துள்ளது. அந்த அழகிகளுடன் ஜாலியாக பேசுவதற்கு, பழகுவதற்கு, உல்லாசமாக இருப்பதற்கு என தனித்தனியாக பணம் நிர்ணயித்துள்ளனர்.

    அதில் மணிக்கு ரூ.2500 முதல் ரூ.20 ஆயிரம் வரை இருந்ததாகவும், அவற்றில் சில அழகிகளின் பெயரில் ஜெயசூர்யா பணத்தை கட்டி உள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் சென்ற பின்னர் செயலியில் இருந்து உரிய பதில்கள் வரவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் மீண்டும், மீண்டும் அந்த செயலியில் உள்ள பல்வேறு அழகிகளின் பெயரில் பணத்தை கட்டி ஒரே நாளில் ரூ.1 லட்சம் வரை கட்டி உள்ளார். ஆனால் பணத்தை இழந்தது மட்டுமே மிச்சம் ஆகி உள்ளது. குறிப்பிட்ட அழகிகளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதன் பின்னர் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

    இதனால் நேற்று காலை அவர் செயலியில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தான் கட்டிய பணத்தை மட்டுமாவது திரும்ப தந்து விடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசியவர்கள் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஐ.டி. ஊழியர் வீட்டில் இருந்து 3.50 லட்சம் மதிப்புள்ள கடன் பத்திரம் ஒன்று சிக்கியுள்ளதாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி கூறினார்.
    தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி இன்று பொழிச்சலுருக்கு சென்றார். அங்கு மனைவி, குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த ஐ.டி. ஊழியர் பிரகாஷ் வீட்டுக்கு சென்று பிணமாக கிடந்தவர்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐ.டி. ஊழியர் பிரகாஷ் பேட்டரியில் இயங்கும் ரம்பத்தால் மனைவி மற்றும் குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொன்று தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்த பிரகாஷ் 2 கடிதம் எழுதி ஒன்றை சுவற்றில் ஒட்டி வைத்துள்ளார். மற்றொன்றை ஒரு நோட்டுக்குள் வைத்துள்ளார். அந்த கடிதத்தில் யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

    இந்த கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். முதலில் குழந்தைகளை கொன்று விட்டு, பின்னர் மனைவியை கொலை செய்துள்ளார். அதன் பிறகு தனது வலது கையால் ரம்பத்தை பிடித்து தனது கழுத்தை அறுத்திருப்பது அங்கு பார்த்தபோது தெரிய வந்தது. அது பேட்டரியில் இயங்கும் ரம்பம் என்பதால் பிரகாஷ் இறந்த பிறகும் அந்த ரம்பம் இயங்கிக் கொண்டு இருந்தது.

    அந்த ரம்பத்தை கடந்த 19-ந்தேதி அவர் ஆன்லைனில் வாங்கியுள்ளார். எனவே அதற்கு முன்பு அவரது செல்போனில் வந்த அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். கடன் தொல்லையா? வேறு ஏதாவது பிரச்சினையா? அல்லது யாராவது அவர்களை தற்கொலைக்கு தூண்டி மிரட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இது தற்கொலை என்றாலும் கொலை என்ற கோணத்தில் தான் எங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம். அப்போது தான் பல உண்மையான தகவல்கள் கிடைக்கும். அந்த வீட்டில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் பிரகாசின் கால்தடம் பதிவாகியுள்ளது. கதவும் திறந்தே கிடந்தது. இரவு 11 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரிகிறது. அவரது வீட்டில் இருந்து 3.50 லட்சம் மதிப்புள்ள கடன் பத்திரம் ஒன்றும் சிக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×