search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.எல்.விஜய்"

    • இது ஒரு உளவியல் த்ரில்லர் படம். இப்படத்தை 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது
    • இந்த புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது

    'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்த 'மிஷன் சாப்டர் 1' ஆக்ஷன் படம் இயக்கத்துக்குப்பின் இயக்குனர் ஏ.எல். விஜய் தற்போது புதிய படம் இயக்கும் பணியை தொடங்குகிறார்.

    இந்த படத்தில் நடிகர் மாதவன்- கங்கனா ரணாவத் நடிக்கின்றனர்.இது ஒரு உளவியல் த்ரில்லர் படம். இப்படத்தை 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்பட வில்லை.

    இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.




     


     ஏ.எல்.விஜய் பெரும்பாலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து தெய்வத்திருமகள், சைவம், மதராசப்பட்டினம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ஆனால், தற்போது இந்த புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

    • விக்ரம், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் தெய்வதிருமகள்.
    • இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் தெய்வதிருமகள். விக்ரம், அனுஷ்கா, அமலாபால், நாசர், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்பாக்கும் மகளுக்கும் உள்ள பிணைப்பை மையப்படுத்தி வெளியான இப்படம் பலரையும் உருக வைத்தது. குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும் அதில் இடம்பெற்ற ஜிவி பிரகாஷின் இசையும் இன்றளவும் கண்கலங்க வைக்கும் காட்சியாக உள்ளது.



    இந்நிலையில் தெய்வதிருமகள் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை பார்த்த நபர் ஒருவர் தேம்பி தேம்பி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். 



    • விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான தியா படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடித்தவர் நாகசவுரியா.
    • இவருக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான தியா படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடித்தவர் நாகசவுரியா, தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி இளம் நடிகராக உயர்ந்துள்ளார். இதுவரை நாகசவுரியா நடிப்பில் ௨௫ படங்கள் வந்துள்ளன. சமீபத்தில் நாகசவுரியாவுக்கும், சாய்பல்லவிக்கும் ஏற்கனவே மோதல் ஏற்பட்டு பரபரப்பானது. சாய்பல்லவி படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் தாமதமாகவே வருவார் என்றும், அவருக்கு நடிப்பில் ஈடுபாடு இல்லாமல் எல்லோரையும் கஷ்டப்படுத்தினார் என்றும் நாகசவுரியா குற்றம் சாட்டினார்.

    நாகசவுரியா

    நாகசவுரியா

     

    இதனை மறுத்த சாய்பல்லவி, ''படப்பிடிப்பில் நான் மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுத்ததாக நாகசவுரியா சொன்னது வியப்பாக உள்ளது. இதுபோல் யாரும் என்மீது குற்றம் சொன்னது இல்லை" என்று பதிலடி கொடுத்து இருந்தார். இந்த மோதல் பரபரப்பானது.

     

    நாகசவுரியா

    நாகசவுரியா

    இந்நிலையில் நாகசவுரியாவுக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த அனிஷா ஷெட்டி என்பவரை மணக்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 19-ந் தேதி பெங்களூருவில் நடக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படம் ’அச்சம் என்பது இல்லையே’.
    • இப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, தேவி உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தார். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி கடந்த ஆண்டு 'தலைவி' படத்தை இயக்கி அனைவரையும் கவர்ந்தார்.

     

    அச்சம் என்பது இல்லையே படக்குழு

    அச்சம் என்பது இல்லையே படக்குழு

    இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏ.எல்.உதயா மற்றும் ஏ.எல்.விஜய்யின் தாயாரும், எ.எல்.அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை காலமானார்.
    • இவருடைய மறைவிற்கு திரைதுறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    2007-இல் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். அதன்பின் மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் எ.எல்.அழகப்பனின் மகன் மற்றும் நடிகர் ஏ.எல்.உதயாவின் சதோதரர்.


    இந்நிலையில் ஏ.எல்.உதயா மற்றும் ஏ.எல்.விஜய்யின் தாயாரும், எ.எல்.அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை இன்று காலை இயற்கை எய்தினார். இவரின் மறைவிற்கு திரைதுறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    ×