search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரம் விற்பனை"

    • 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது.

    திருப்பூர் :

    தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உர வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வகையில், 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில், 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது. 354 டன் விற்பனை செய்த ருத்திரபாளையம் கூட்டுறவு சங்கம் இரண்டாம் பரிசும், 343 டன் விற்பனை செய்த தளி கூட்டுறவு சங்கம் மூன்றாவது பரிசையும் பெற்றது.கலெக்டர் அலுவலகத்தில் இந்த மூன்று சங்கங்களுக்கும் பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மண்டல இணை பதிவாளர் சீனிவாசன், கரூர் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா ஆகியோர் இதனை வழங்கினர். சரக துணை பதிபதிவாளர் சண்முகவேல், உடுமலை நகர கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர்.

    • தியாகதுருகம் பகுதி தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்யப்பட்டனர்.
    • யூரியாவை வாங்கி தங்களது பயிர்களுக்கு பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சுமார் 5000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து பராமரித்து வருகின்றனர். பயிர் செய்துள்ள விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுகின்றனர். இவ்வாறு பயிர் கடன் பெரும் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் பயிர்களுக்கு தேவையான அளவு உரம் மற்றும் ரொக்கம் ஆகியவை கடனாக வழங்கப்படுகிறது. 

    அதன்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று உரம் வாங்கும் விவசாயிகளிடம் ஒருசில கூட்டுறவு சங்கங்களில் டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ளஸ் ஆகிய உரங்களை மட்டுமே இருப்பு உள்ளது எனவும், கடந்த ஒருமாத காலமாக யூரியா இருப்பு இல்லை என கூறுகின்றனர். எனவே விவசாயிகள் தனியார் கடைகளில் யூரியா வாங்கும் அவல நிலை உள்ளது. இதனால் தியாகதுருகம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா வாங்க செல்லும்போது வியாபாரிகள் டி.ஏ.பி.,காம்ளஸ் ஆகிய உரங்களை எடுத்தால் மட்டுமே யூரியா மட்டும் வழங்க முடியும் எனவும் கூடுதலாக திரவ யூரியாவும் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

    மேலும் ரூ. 266 க்கு விற்பனை செய்ய வேண்டிய யூரியா முட்டை ரூ.350 முதல் 400 வரை விற்பனை செய்வதாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு யூரியாவை வாங்கி தங்களது பயிர்களுக்கு பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதேபோல் கடந்த மாதம் யூரியா கூடுதல் விலைக்கு விற்க்கப்படுவது குறித்து வேளாண்மை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதன்படி தியாகதுருகம் வேளாண்மை அதிகாரிகள் உரக்கடைகள் ஆய்வு செய்தனர்.ஆனால் வியாபாரிகள் தொடர்ந்து யூரியாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது . எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்து யூரியா கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். . மேலும் தியாகதுருகம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    விற்பனை முனையக் கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் ஆதார் அட்டையினை அவசியம் கொண்டு வந்து உரங்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்போது சம்பா பருவ பணிகள் தொடங்க உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை மண்வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் உரமிடுவதால் மண்வளத்தினை பாதுகாப்பதுடன், உர செலவும் குறைகிறது.

    எனவே விவசாயிகள் மண்வள அட்டையின் பரிந்துரைப்படி பயிருக்கு உரமிட வேண்டும். தற்போது விற்பனை முனையக் கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையினை அவசியம் கொண்டு செல்வதுடன் தங்களின் கைரேகையினை பதிவு செய்து உரங்களை பெற வேண்டும். உரங்களை விற்பனை நிலையங்களில் வாங்கும்போது தவறாது ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகளை தவிர மற்றவர்களின் ஆதார் எண் மற்றும் கைரேகை பெற்றுக் விற்பனை முனைய கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்பட்டால் உர விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மொத்த உர விற்பனையாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றம் செய்திடக் கூடாது. விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்யும்போது அதிகபட்ச விற்பனை விலைக்கு உட்பட்டு விற்பனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 
    ×