search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபி முதல்வர்"

    • மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உயர்மட்டக் கூட்டத்தில் போலீசாருக்கு உ.பி. முதல்வர் அறிவுறுத்தல்.
    • உ.பியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.

    முன்னாள் எம்.பியும் பிரபல ரவுடியுமான ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சில மணிநேரங்கள் முன்பு ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே யாரோ ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

    இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இதன் எதிரொலியால், உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணைக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    முன்னதாக இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதியநாத், டிஜிபி ஆர்.கே.விஸ்வகர்மா மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டி.ஜி., பிரசாந்த் குமார் ஆகியோருடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உயர்மட்டக் கூட்டத்தில் போலீசாருக்கு உ.பி. முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

    • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது.
    • கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படுகிறது.

    உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 22 லட்சம் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் உட்பட 75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பணமில்லா மருத்துவ வசதி வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

    தீன் தயாள் உபாத்யாயா அரசு ஊழியர்களுக்கான பணமில்லா மருத்துவத் திட்டத்தின் கீழ், அரசு நடத்தும் நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள தகுதியானவர்கள் எந்தவித நிதி வரம்பும் இல்லாமல் பணமில்லா மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள்.

    மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது.

    இத்திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தீன் தயாள் உபாத்யாயா அரசு ஊழியர்களுக்கான பணமில்லா மருத்துவத் திட்டத்தின் கீழ், தகுதியான பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாநில சுகாதார அட்டை வழங்கப்படும்.

    மாநில சுகாதார அட்டையை தாங்களாகவே பதிவிறக்கம் செய்து, அரசு அல்லது எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா மருத்துவச் சிகிச்சையின் பலனைப் பெறும் வகையில் செயல் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

    'பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

    மாநிலத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களுக்கு முக்யமந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

    மேலும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படுகிறது.

    தனது முந்தைய ஆட்சிக் காலத்திலேயே, மாநில அரசு ஊழியர்களுக்கு ரொக்கமில்லா மருத்துவ வசதிகளை வழங்குவதற்கான செயல் திட்டத்தைத் தயாரிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு தனது அரசு அறிவுறுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு.
    • அசம்பாவிதங்களை தடுக்க ஹெலிகாப்டரை உடனியாக வாரணாசியில் தரை இறக்கம்.

    உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வாரணாசிக்கு சென்றிருந்தார். அங்கு, காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ததோடு, ஆய்வுக் கூட்டமும் நடத்தினார்.

    பின்னர், வாரணாசியில் இருந்து லக்னோவிற்கு யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது, ஹெலிகாப்டர் வானில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக பறவை ஒன்று மோதியது. இதில் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அசம்பாவிதங்களை தடுக்க ஹெலிகாப்டரை உடனியாக வாரணாசியில் தரை இறக்கப்பட்டது. இதனை அம்மாவட்ட ஆட்சியர் கவுஷல்ராஜ் சர்மா தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து உரையாடினார்.
    • செய்தித்தாள்களை படிப்பதன் மூலம், வரவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பீர்கள்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து உரையாடினார்.

    அப்போது பேசிய அவர், மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் என்பதால் மாணவர்கள் நூலகங்களுக்கு சென்று செய்தித்தாள்களை தவறாமல் படிக்க வேண்டும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    மாணவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மாணவர்கள் பிரதமர் மோடிக்கு அவர் தொடங்கியுள்ள திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து அஞ்சல் அட்டைகளை அனுப்ப வேண்டும்.

    செய்தித்தாள்களை படிப்பதன் மூலம், வரவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பீர்கள். மாநில அரசின் அப்யுதயா திட்டம் மாணவர்கள் அவர்கள் எழுதத் திட்டமிட்டுள்ள பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குச் சித்தப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×