search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உன்னாவ்"

    உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண்ணை கற்பழித்த விவகாரத்தில் பா.ஜ.க எம்எல்ஏ குல்திப் சிங் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
    லக்னோ :

    உத்திரப்பிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், தன்னை கற்பழித்த செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ குல்திப் சிங் மற்றும் அவரது சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீடு முன்பு தனது தந்தையுடன் தீக்குளிக்க முயன்றார்.

    அப்போது, சிறுமியின் தந்தை எம்எல்ஏவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை, சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தார்.

    பெரும் விஸ்வரூபம் எடுத்த இந்த விவகாரத்தை, அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. பின்னர், உத்திரப்பிரதேச அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது.

    இந்நிலையில், பா.ஜ.க எம்எல்ஏ குல்திப் சிங் மீது சி.பி.ஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
    ×