search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு வந்தடைந்தது"

    • உரங்கள் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை ஆய்வு செய்தனர்.
    • உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச் சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி, தென்னை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ள காரணத்தால் பயிர் சாகுபடிக்கு உகந்த சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 301 மெட்ரிக் டன் யூரியா, 127 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 893 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் மற்றும் கொச்சியில் இருந்து 1,370 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளா ண்மை இணை இயக்குநர் சின்னசாமி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டு ப்பாடு) வைத்தீஸ்வரன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) ஜெய சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது வேளா ண்மை இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 4,027 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,894 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 3,133 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 11,086 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 856 மெ.டன்னும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு தட்டுப்பாடின்றி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளா ண்மை விரிவாக்க மையங்க ளில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவ தோடு, திண்டலில் உள்ள வேளா ண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படு வதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தூத்துக்குடியில் இருந்து உரங்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
    • இதனை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோ ளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி, தென்னை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ள காரணத்தால் பயிர் சாகுபடிக்கு உகந்த சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 637 மெட்ரிக் டன் யூரியா, 130 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 155 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 9 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.

    இதனை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டு ப்பாடு) வைத்தீஸ்வரன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) ஜெயசந்தி ரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்ததாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 5,444 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,668 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1,308 மெ.டன்னும்,

    காம்ப்ளக்ஸ் உரம் 10,010 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 903 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலை யங்களில் போதிய அளவு தட்டுப்பாடின்றி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளா ண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதோடு,

    திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலை யத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரை க்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படு த்தி உர செலவை குறைத்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • குஜராத்தில் இருந்து யூரியா உரம் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குஜராத்தில் இருந்து கிரிப்கோ நிறுவனத்தின் மூலம் 2,200 மெட்ரிக் டன் பாரத் யூரியா உரம் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) கு.ஜெயசந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 5,347 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,585 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1,400 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10,169 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 896 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு தட்டுப்பாடு இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படு த்துவதோடு, திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உரச்செலவை குறைத்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சென்னையில் இருந்து யூரியா உரம் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி ஆய்வு செய்தார்.
    • குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பாசனத்திற்காக தடப்பள்ளி-அரக்கன் கோட்டை மற்றும் காளிங்கராயன் ஆகிய கால்வாய்களிலும், சம்பா பாசனத்திற்காக கீழ் பவானி மற்றும் மேட்டூர் வலது கரை ஆகிய கால்வாய் களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு நெல் சாகுபடி பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக் கடலை, மக்காச்சோளம், எள் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 'ஒரே நாடு ஒரே உரம்" திட்டத்தின் கீழ் 2-வது முறையாக 'பாரத்" யூரியா உரம் சென்னையில் இருந்து எம்.எப்.எல் நிறுவனத்தின் மூலம் 1,060 மெட்ரிக் டன்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடை ந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அவர் தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 4,765 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1,914 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1,205 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10,877 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 818 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் உரங்களின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவரங்களை விலைப் பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரியும்படி வைப்பது,

    விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது, அனைத்து விற்பனைகளையும் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்வது, உரிய முதன்மை ச்சான்று படிவங்களை நிறுவனங்களிடமிருந்து பெற்று உரங்களை கொள்முதல் செய்வது,

    உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைத்திருப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற அனைத்து உர விற்பனை யாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் உரங்களுடன் சேர்த்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசா யிகளுக்கு வழங்கக்கூடாது. மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதோடு திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×