search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு கலெக்டர் அலுவலகம்"

    • போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    ஈரோடு:

    கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து பேங்க் ஆபரேட்டர்கள் திரண்டு வந்தனர்.

    அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் தூய்மை பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் முழு நேர பணி செய்வதால் பணி வரன்முறை செய்து மாதம் குறைந்தபட்சம் ரூ.18,000 சம்பளம், இதரப்படிகள் முறையாக வழங்க வேண்டும்.

    கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் படி வேலைப்பளு கூடியதால் பணி வரன்முறை செய்து மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம், இதரப்படிகள் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் 10 ஆயிரம் சம்பளம், வருகை பதிவேடும், குழு காப்பீடும் செய்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி செய்து ஓய்வுபெற்ற, ஓய்வு பெறுகின்ற கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்சம் பணிக்கொடையும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலிறுத்தி போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உங்கள் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • நாங்கள் இதுவரை வட்டியாக ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து உள்ளோம்.
    • எங்களிடம் சமாதானம் பேசி ரூ.25 லட்சம் பணத்தை கொடுத்தால் நிலத்தை ஒப்படைப்பதாக கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஒலகடம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். டெக்ஸ்டைல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜோதிமணி. இவர் இன்று காலை தனது தாய் மற்றும் சகோதரி மகளுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் திடீரென அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மண்எண்ணை கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை ஓடிச்சென்று தடுத்து நிறுத்தினர். பின்னர் ஜோதிமணி ஒரு புகார் மனு கொடுத்தார்.

    எனக்கும் எனது மகன் சசிகுமாருக்கும் ஒலகடம் பகுதியில் 2.22 சென்ட் நிலம் உள்ளது. நாங்கள் அவசர தேவைக்காக ஜம்பை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.25 லட்சம் கடன் பெற்றோம். இதற்காக 100 ரூபாய்க்கு மாதம் 2.50 வட்டியாக கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் தயார் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் அவரது பெயருக்கு பத்திரம் எழுதிக் கொடுத்தோம். இதன் மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் ஆகும்.

    இந்நிலையில் நாங்கள் இதுவரை வட்டியாக ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து உள்ளோம். பின்னர் நாங்கள் முழுத்தொகையையும் கொடுத்து விடுகிறோம் என்று கூறினோம். ஆனால் அவர் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்தார். இது தொடர்பாக நாங்கள் பவானி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இதையடுத்து எங்களிடம் சமாதானம் பேசி ரூ.25 லட்சம் பணத்தை கொடுத்தால் நிலத்தை ஒப்படைப்பதாக கூறினார். அதன்படி நாங்கள் முதல் கட்டமாக ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தோம். மீதி தொகையான ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுக்க முயன்ற போது அவர் பணத்தை வாங்க மறுத்து விட்டார். மேலும் எங்களது நிலத்தை வேறு ஒருவருக்கு பத்திரம் செய்து கொடுத்து விட்டார்.

    இது குறித்து கேட்டால் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும் நிலத்தை வாங்கியவரும் நிலத்தை சுற்றி முள்வேலி போட்டு விட்டார். எனவே எங்கள் நிலத்தை மீட்டு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×