search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ விஞ்ஞானி"

    • முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    • இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பணியாளர்களுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    இந்தியாவின் இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோளான என்.வி.எஸ். 01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளானது ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த செயற்கைக்கோள் மூலம் தரை, கடல், வான்வெளி போக்குவரத்து குறித்தும், பேரிடர் மேலாண்மை குறித்தும் தகவல்களை பெற முடியும். குறிப்பாக இந்த ராக்கெட், முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 6 வது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் என்பது தனிச்சிறப்பு.

    மேலும் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட்டை தயாரித்ததும், செயற்கைக்கோளுடன் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதும், நிலைநிறுத்தியதும் மேலும் ஒரு மைல்கல்.

    மத்திய அரசு-இஸ்ரோ விஞ்ஞானிகளையும், பணியாளர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள், சான்றுகள், ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் வாழ்வு சிறக்க துணை நிற்க வேண்டும். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பணியாளர்களுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நான்கு பேருக்கும் கேரள ஐகோர்ட் கடந்த ஆண்டு முன்ஜாமீன் வழங்கியது.
    • மேல்முறையீட்டு மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு அளிக்க கேரள ஐகோர்ட்டுக்கு உத்தரவு

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது. இவ்வழக்கில் நம்பி நாராயணனை பொய்யாக சிக்க வைத்ததாக விசாரணை அதிகாரியான குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார், கேரளாவை சேர்ந்த இரண்டு முன்னாள் அதிகாரிகளான விஜயன், தம்பிதுர்காதத், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் 4 பேருக்கும் கேரள ஐகோர்ட் கடந்த ஆண்டு முன்ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு, இன்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 4 பேருக்கும் கேரள ஐகோர்ட் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக கேரள ஐகோர்ட்டுக்கு அனுப்பி உத்தரவிட்டது.

    நீதிபதிகள் கூறும்போது, மேல் முறையீடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றன. இந்த மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு அளிக்க கேரள ஐகோர்ட்டுக்கு உத்தரவிடுகிறோம். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை 5 வாரங்களுக்கு கைது செய்யக்கூடாது என்றனர்.

    ×