search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட்: இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைக்கு ஒரு மைல்கல்- ஜி.கே.வாசன்
    X

    ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட்: இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைக்கு ஒரு மைல்கல்- ஜி.கே.வாசன்

    • முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    • இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பணியாளர்களுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    இந்தியாவின் இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோளான என்.வி.எஸ். 01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளானது ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த செயற்கைக்கோள் மூலம் தரை, கடல், வான்வெளி போக்குவரத்து குறித்தும், பேரிடர் மேலாண்மை குறித்தும் தகவல்களை பெற முடியும். குறிப்பாக இந்த ராக்கெட், முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 6 வது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் என்பது தனிச்சிறப்பு.

    மேலும் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட்டை தயாரித்ததும், செயற்கைக்கோளுடன் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதும், நிலைநிறுத்தியதும் மேலும் ஒரு மைல்கல்.

    மத்திய அரசு-இஸ்ரோ விஞ்ஞானிகளையும், பணியாளர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள், சான்றுகள், ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் வாழ்வு சிறக்க துணை நிற்க வேண்டும். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பணியாளர்களுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×