search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளையோர் ஒலிம்பிக்"

    அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின், வில்வித்தைப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. #YouthOlympics #AkashMalik
    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் மாலிக் (வயது 15) வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் இவர் அமெரிக்க வீரர்  டிரண்டன் கோவல்சிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம் இந்தியா மொத்தம் 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றுள்ளது. 

    அரியானாவைச் சேர்ந்த ஆகாஷ் மாலிக் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை விவசாயி ஆவார். அவர் தன்னைப் போல் தன் மகன் விவசாயம் செய்வதை விரும்பவில்லை.



    இதுகுறித்து ஆகாஷ் மாலிக் கூறுகையில், ‘நான் படித்து அரசு வேலைக்கு போக வேண்டும் என்று பெற்றோர் விரும்பினார். ஆனால், வில்வித்தையில் பயிற்சி பெற்று பதக்கங்கள் வாங்கத் தொடங்கியதும், எனது பயிற்சிக்கு முழு ஆதரவு அளித்தனர். இப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அடுத்து 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டும்’ என்றார். #YouthOlympics #AkashMalik #Archery
    இளையோர் ஒலிம்பிக்கில் தமிழக தடகள வீரர் பிரவீன் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். #YouthOlympic #PraveenChitravel
    பியூனஸ் அயர்ஸ்:

    3-வது இளையோர் ஒலிம்பிக் (யூத்) போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் (மும்முறை நீளம் தாண்டுதல்) கியூபா வீரர் அலெக்ஜான்ட்ரோ டியாஸ் (34.18 மீட்டர்) தங்கப்பதக்கமும், நைஜீரியாவின் எம்மானுல் ஒரிட்ஸ்மீவா (31.85 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.

    தமிழகத்தை சேர்ந்த பிரவீன் வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்த போட்டி புதிய விதிமுறைப்படி இரண்டு பகுதியாக நடத்தப்பட்டது. இதன்படி முதல் பகுதியில் அதிகபட்சமாக 15.84 மீட்டர் தூரமும், 2-வது பகுதியில் அதிகபட்சமாக 15.68 மீட்டர் தூரமும் தாண்டினார். ஆக மொத்தம் 31.52 மீட்டர் நீளம் தாண்டிய பிரவீன் 3-வது இடத்தை பிடித்து பதக்கத்தை சொந்தமாக்கினார். அவர் சர்வதேச அளவில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பள்ளிகளுக்கு இடையே நடந்த கேலோ விளையாட்டில் தங்கம் வென்று இருந்தார்.

    17 வயதான பிரவீன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர். அவரது தந்தை சித்திரைவேல் விவசாய கூலித்தொழிலாளி. பிரவீனின் சாதனை குறித்து அவருக்கு பயிற்சி அளித்து வரும் இந்திரா சுரேஷ் கூறியதாவது:-

    பிரவீன் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு சிறப்பு விடுதியில் தங்கியிருந்து 7-ம் வகுப்பு படித்த போது, அவரது திறமையை கண்டு வியந்தேன். அதைத் தொடர்ந்து அவர் மீது தனிகவனம் செலுத்தி பயிற்சி கொடுத்தேன். அந்த சமயம் நான் எஸ்.டி.ஏ.டி.யில் (சென்னை) தடகள பயிற்சியாளராக பணியாற்றி கொண்டிருந்தேன். பிறகு நான் நாகர்கோவிலுக்கு இடம் மாறிய போது, பிரவீனும் அங்கு வந்து உங்களிடம் தான் பயிற்சி பெறுவேன் என்று கூறினார். அதனால் அவருக்கு தொடர்ந்து பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன். பிரவீன் மட்டுமல்ல, அவரது இளைய சகோதரரும் என்னிடம் தான் பயிற்சி எடுத்து வருகிறார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர், பிரவீன். அவரது தந்தை விவசாய தினக்கூலி. தந்தையின் வருமானம் பிரவீனின் தடகள பயிற்சிக்கு போதுமானதாக இல்லை. போட்டிகளில் பங்கேற்க ஒரு சிலர் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

    பிரவீனிடம் அபாரமான திறமை இருக்கிறது. கடினமாக உழைக்கக்கூடியவர். எப்போதாவது தான் சொந்த ஊருக்கு செல்வார். மற்றபடி அவரது தந்தை தான் இங்கு வந்து பார்த்து செல்வார். அவரை சீனியர் போட்டியில் தேசிய அளவிலான சாம்பியனாக உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் பிறகு இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க செய்ய வேண்டும்.

    பிரவீன் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். தேர்வு எழுதுவதற்காக மட்டுமே அங்கு செல்வார். அதற்குரிய அனுமதியை அந்த கல்லூரி நிர்வாகம் வழங்கி இருகிறது. மற்ற நேரங்களில் அவர் நாகர்கோவிலில் தங்கியிருந்து பயிற்சியில் ஈடுபடுவார்.

    இவ்வாறு இந்திரா கூறினார். 
    இளையோர் ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். #YouthOlympics2018
    இளையோர் ஒலிம்பிக் தொடர் அர்ஜென்டினாவில் நடைபெற்று வருகிறது. பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் சீனாவின் லீ ஷிபெங்கை எதிர்கொண்டார்.



    இந்தியாவின் லக்‌ஷயா சென் சீன வீரரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 15-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்பியடைந்தார்.
    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெர் தங்கப்பதக்கம் வென்றனர். #YouthOlympics2018 #ManuBhaker
    பியூனஸ் அயர்ஸ்:

    206 நாடுகள் பங்கேற்றுள்ள 3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பளுதூக்குதல் போட்டியில் ஆண்களுக்கான 62 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரினுங்கா மொத்தம் 274 கிலோ (ஸ்னாட்ச்-124, கிளன் அண்ட் ஜெர்க்-150 கிலோ) எடை தூக்கி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். துருக்கி வீரர் தோப்தாஸ் கானெர் மொத்தம் 263 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கமும், கொலம்பியா வீரர் வில்லார் எஸ்டீவன் ஜோஸ் மொத்தம் 260 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.



    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். மிசோரமை சேர்ந்த 15 வயதான ஜெர்மி லால்ரினுங்கா உலக இளையோர் மற்றும் ஆசிய இளையோர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லால்ரினுங்கா கூறுகையில், ‘இளையோர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தந்தை குத்துச்சண்டையில் தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்றவர். அதனால் நானும் குத்துச்சண்டை வீரராக ஆக வேண்டும் என்று விரும்பி, ஆரம்ப காலத்தில் அதற்குரிய பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தேன். அந்த சமயத்தில் தான் எங்களது கிராமத்தில் புதிதாக பளுதூக்குதல் அகாடமி திறக்கப்பட்டது. அதை பார்த்ததும் எனக்குள் பளுதூக்குதல் வீரராக உருவெடுக்க வேண்டும் என்று ஆசை துளிர்விட்டது. அதன் பிறகு பளுதூக்குதலில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த போட்டிக்கு உடல்ரீதியாக நம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதனால் தான் இந்த போட்டியை மிகவும் விரும்புகிறேன்’ என்றார்.



    மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த மே மாதம் அம்மை நோயால் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து குணமடைந்ததும், பழைய நிலையை எட்ட கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. இனி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இன்னும் தீவிரமாக தயாராகுவேன். ஒலிம்பிக் போட்டிக்கு எனது உடல் எடைப்பிரிவை 67 கிலோவுக்கு மாற்றப்போகிறேன்’ என்றார்.

    இதன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீராங்கனை மானு பாகெர் 236.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ரஷிய வீராங்கனை இயானா எனினா 235.9 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஜார்ஜியா வீராங்கனை நினோ குட்சிபெரிட்ஸ் (214.6 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

    அரியானாவை சேர்ந்த 16 வயதான மானு பாகெர் உலக கோப்பை போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தி இருந்தார். சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அவர் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் அவர் பதக்கமின்றி ஏமாற்றம் அளித்தார். அதற்கு இந்த போட்டியில் மானு பாகெர் பரிகாரம் தேடிக் கொண்டார். இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    மானு பாகெர் கூறுகையில், ‘இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆசிய போட்டி ஏமாற்றத்திற்கு பிறகு கிடைத்த இந்த வெற்றி எனது மனஉறுதிக்கு வலுசேர்க்கும். ஒவ்வொரு முறையும் முழுதிறமையை வெளிப்படுத்தவே முயற்சிக்கிறேன். சில நேரம் வெற்றிகரமாக அமையாமல் போகலாம். ஆனால் விடா முயற்சியை சிறந்த முறையில் தொடர்வதும், அதிக புள்ளிகள் குவிப்பதும் திருப்தி அளிக்கிறது’ என்றார்.

    ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 9-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் தோற்கடித்தது. பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.  #YouthOlympics2018 #ManuBhaker
    ×