search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறந்து கிடந்த"

    • வனப்பகுதிக்குள் காட்டுயானை இறந்தது கிடந்ததை கண்டனர்.
    • குடல் புழுநோயால் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குன்றி பிரிவு கொளஞ்சி மடுவு வனப்பகுதியில் கடம்பூர் வனச்சராக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று காலை வனப்பணியாளர்கள் ரோந்து சென்றனர்.

    அப்போது வனப்பகுதி க்குள் காட்டுயானை இறந்தது கிடந்ததை கண்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சத்தியம ங்கலம் புலிகள் காப்பக கால்ந டை உதவி மருத்துவர் சதா சிவம் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்றனர்.

    பின்னர் தொண்டு நிறுவன பிரதிநிதி கிருஷ்ணகுமார், வனக்குழு தலைவர் மாரியப்பன், வனப்பணியாளர்கள் முன்னிலையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.

    இறந்து கிடந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை எனவும், குடல் புழுநோயால் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கால்நடை மருத்துவர்கள் யானைகளை பிரேத பரிசோதனை செய்தனர்.
    • அந்தியூர் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர், தாளக்கரை, தட்டக்கரை வனப்பகுதிகளில் யானை கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து சென்று கண்கா ணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் வன சரகத்திற்கு உட்பட்ட தாளகரை ரோட்டில் உள்ள தென் பர்கூர் காப்புக்காடு மாரியணை சரகம் பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டி ருந்தனர்.

    அப்போது அந்த பகுதி யில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட வனப் பணியாளர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது துர்நாற்றம் வீசிய இடத்தில் ஒரு பெண் யானை மற்றும் ஒரு குட்டி யானை என 2 யானைகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அந்தியூர் வன சரகர் உத்தரசாமிக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி சம்பவ இடத்திற்கு சென்ற வனசரகர் உத்திரசாமி இறந்த யானைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து 2 யானைகளை யும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் சதாசிவம், கார்த்திக் மற்றும் பரத் ஆகியோர் நேரில் வந்து யானைகளை பிரேத பரிசோதனை செய்தனர்.

    இதையடுத்து, யானைகளின் உடல்கள் மற்ற விலங்குகளின் உணவு க்காக அங்கேயே போடப்ப ட்டது. வனப்பகுதியில் குட்டியு டன் யானை எப்படி இறந்த து என்பது குறித்து அந்தியூர் வனத்து றையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நொய்யல் அருகே காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் தங்கராஜ் இறந்து கிடந்தார்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார் பாறை பகுதி யை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 60). விவசாயி. இவர் நொய்யல் அருகே காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் இறந்து கிடந்தார்.

    இதை கண்ட பொது மக்கள் இது குறித்து அவரது மனைவி மல்லிகா மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மல்லிகா மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு வீட்டுக்கு எடுத்து வந்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீ சார் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரது மனைவி மல்லிகா கூறும் போது, எனது கணவர் அடிக்கடி மது குடித்து விட்டு கீழே விழுவது வழக்கம்.

    அதே போல் எனது கணவர் மது போதை யில் நொய்யல் அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு செல்லும் போது நிலை த்தடுமாறி கீழே விழுந்து அவருக்கு அடிபட்டு இறந்து இருக்கலாம் என தெரி வித்தார்.

    இதையடுத்து தங்கராஜ் உடலை போலீசார் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீ சார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு பிரகாஷ் சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கிடந்தார்.
    • இதையடுத்து அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (வயது 45). விவசாயி. இவருக்கு திரு மணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பிரகாசுக்கு குடி பழக்கம் இருப்பதாக கூறப் படுகிறது.

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு பிரகாஷ் சென்றார். அங்கு பிரகாஷ் மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கிடந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு தகவல் கொடு த்தனர். இதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    இதையடுத்து அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்ட ர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த நிலையில் பிரகா சின் மனைவி அந்தியூர் போலீசில் என் கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். இதை யடுத்து போலீசார் விசா ரணை நடத்தினர். இதை தொடர்ந்து பிரகாசின் உடலை பிரேத பரி சோதனைக்காக பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் கூறும் போது பிரகாசின் பிரேத பரிசோதனை வந்த பிறகு தான் அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது மது போதையில் இறந்தாரா என தெரிய வரும் என கூறினர்.

    இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்கெ்டர் கார்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×