search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை ரெயில் பாதை"

    • நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே அமைக்கப்பட உள்ள இரட்டை ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட்டிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
    • ரெயில்வே கேட்களில் வாகனங்கள் இலகுவாக செல்ல வசதியாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில்-நெல்லை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். தற்பொழுது இரட்டை ரெயில் பாதை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ரெயில்வே கிராசிங் பகுதிகளில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரெயில்வே கேட்டை மூடிவிட்டு தண்டவாளங்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ரெயில்வே கேட் பகுதிகளில் உள்ள தண்டவாள பகுதிகளில் சிமெண்ட் கற்கள் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட உள்ள இடத்தில் நவீன மயமாக்கப்படும் வகையில் ரப்பர் சீட்டுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து ரப்பரைஸ்ட் சீட்டுகள் கொண்டு வரப்பட்டன. தற்போது தண்டவாளங்கள் அமைக்கப்படும் பகுதியில் சிமெண்ட் கற்களுக்கு பதிலாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே கேட் பகுதிகளில் வாகனங்கள் இலகுவாக செல்ல வசதியாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படுகின்றன.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் தற்பொழுது ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட், ராஜாவூர் பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குலசேகரன் புதூர் பகுதியில் ரெயில்வே கேட்டில் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டு அதற்கான பணியை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    2 நாட்களுக்குள் அந்த பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து கோதைகிராமம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து மற்ற ரெயில்வே கேட்களிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் கன்னியாகுமரி-நாகர்கோவில் பகுதியில் ஏற்கனவே இரட்டை ரெயில் பாதை பணிக்காக பல்வேறு ரெயில்வே கேட்டுகளில் சிமெண்ட் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிமெண்ட் கற்களை அப்புறப்படுத்தி விட்டு அந்த பகுதிகளிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் நாகர்கோவில்-திருவனந்த புரம் இடையே அமைக்கப்பட உள்ள இரட்டை ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட்டிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மதுரை-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்களில் வாகனங்கள் இலகுவாக செல்ல வசதியாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி, ராஜாவூர் பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 3-வது கேட்டாக குலசேகரன்புதூர் பகுதியில் இந்த பணி நடந்து வருகிறது. மற்ற ரெயில்வே கேட் பகுதிகளிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படும்.

    ஏற்கனவே அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் அகற்றப்பட்டு ரப்பரைஸ்ட் சீட்டுகள் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கேட்டில் பணி மேற்கொள்வதற்கு 2 நாட்கள் ஆகும். அந்த நேரங்களில் அந்த ரெயில்வே கேட் மூடப்பட்டு ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    • நாங்குநேரி ரெயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கியது.
    • நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி மேலப்பாளை யம் ரெயில் நிலையங்களுக்கு இடையில் புதியதாக அமைக்கப்பட்ட இரட்டை ரெயில்வே பாதையில் மின் அமைப்புகள் குறித்த ஆய்வு இன்று நடந்தது.

    தென்னக ரயில்வே மின்சார பிரிவு தலைமை பொறியாளர் சித்தார்த்தா மற்றும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட ரெயில்வே மேலாளர் சச்சிந்தர் மோகன்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக நாங்குநேரி ரெயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாங்குநேரி ரெயில் நிலையத்திலிருந்து சிறப்பு ஆய்வு வாகனத்தில் தொடங்கிய ஆய்வு பணி மேலப்பாளையம் வரை நடந்தது.

    இதில் புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே தண்டவாளம் மின் பாதை மற்றும் கருவிகள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பல பங்கேற்றனர்.

    அப்போது நாங்குநேரி ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்த பொதுமக்கள் சிலர், கொரோனாவுக்கு முன்பு நாங்குநேரி வழியாக 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்ற நிலையில் தற்போது 5 ரெயில்கள் மட்டுமே நாங்குநேரியில் நின்று செல்கிறது. பெரும்பாலான ரெயில்கள் நிறுத்தப்பட்டு விட்டன. எனவே நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்கவும் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் கேரள எல்லையில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் அனைத்து ரெயில்களும் என்று செல்லும் நிலையில் தமிழக எல்லைப் பகுதியில் பாரபட்சம் காட்டப்படுகிறது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாங்குநேரியில் ரெயில்களை நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்ட மேலாளர் உறுதி அளித்தார்.

    • நேற்று இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து வழக்கம் போல் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
    • அதிர்ச்சி அடைந்த பயணிகள் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் முன்பு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நாகர்கோவிலில் இருந்து தினந்தோறும் மதியம் 3.50 மணிக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு தாம்பரம் செல்கிறது.

    மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்கிறது. முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுவதால் இந்த ரெயிலுக்கு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து வழக்கம் போல் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

    இன்று காலை 11 மணிக்கு இந்த ரெயில் நெல்லை ரெயில் நிலையம் வந்தது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். அப்போது இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெறுவதால் அந்தியோதயா ரெயில் நெல்லையுடன் நிறுத்தப்படுவதாகவும், நாகர்கோவில் செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் முன்பு அலுவலர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தாங்கள் நாகர்கோவில் வரை செல்ல டிக்கெட் எடுத்திருப்பதாகவும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திடீரென ரெயில் நிறுத்தப்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களுக்கான டிக்கெட் பணம் திருப்பி வழங்கப்பட்டது.

    டிக்கெட் கவுண்டர் முன்பு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

    • இரட்டை பாதை, புதிய பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து வருகின்றன.
    • இருவழிப்பாதையாக மாற்றப்படுவதால் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 10 மணி நேரத்தில் பயணிக்கலாம்.

    சென்னை:

    இரட்டை ரெயில் தண்டவாள பணி நிறைவையொட்டி கன்னியாகுமரி-சென்னை உள்பட 23 ரெயில்களின் பயண நேரம் விரைவில் மாற்றப்படுகிறது. இதனால் 5 நிமிடம் முதல் 4 மணி நேரம் குறைகிறது.

    கன்னியாகுமரி-நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதையும் நாகர்கோவில்-திருநெல்வேலி இடையே மற்றொரு இரட்டை ரெயில் பாதையும் அமைக்கும் பணி நிறைவடைய உள்ளது.

    மேலும் கன்னியாகுமரி முதல் மதுரை வரை உள்ள பாதை இருவழிப்பாதையாக மாற்றப்படுவதால் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 10 மணி நேரத்தில் பயணிக்கலாம்.

    தெற்கு ரெயில்வேயில், 5 நிமிடம் முதல் 4 மணி நேரம் வரை பயண நேரம் குறைக்கும் வகையில், 23 ரெயில்கள் நேரம் மாற்றியமைக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தெற்கு ரெயில்வே சார்பில் நடந்து வரும் இரட்டை பாதை, புதிய பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து வருகின்றன். இதனால் ரெயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்படுகின்றன.

    கன்னியாகுமரி-சென்னை எழும்பூர், புதுடில்லி-திருவனந்தபுரம், மதுரை-திருவனந்தபுரம், சென்ட்ரல்-திருவனந்தபுரம் உள்ளிட்ட 23 விரைவு ரெயில்களின் நேரம், அடுத்த வாரம் முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது.

    இதனால் 5 நிமிடம் முதல் 4 மணி நேரம் வரை ரெயில் பயண நேரம் குறைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×