search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரட்டை ரெயில் பாதை ஆய்வின் போது நாங்குநேரி ரெயில் நிலையத்தில், கோட்ட  மேலாளரை பொதுமக்கள் முற்றுகை
    X

    இரட்டை ரெயில் பாதை ஆய்வின் போது நாங்குநேரி ரெயில் நிலையத்தில், கோட்ட மேலாளரை பொதுமக்கள் முற்றுகை

    • நாங்குநேரி ரெயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கியது.
    • நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி மேலப்பாளை யம் ரெயில் நிலையங்களுக்கு இடையில் புதியதாக அமைக்கப்பட்ட இரட்டை ரெயில்வே பாதையில் மின் அமைப்புகள் குறித்த ஆய்வு இன்று நடந்தது.

    தென்னக ரயில்வே மின்சார பிரிவு தலைமை பொறியாளர் சித்தார்த்தா மற்றும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட ரெயில்வே மேலாளர் சச்சிந்தர் மோகன்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக நாங்குநேரி ரெயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாங்குநேரி ரெயில் நிலையத்திலிருந்து சிறப்பு ஆய்வு வாகனத்தில் தொடங்கிய ஆய்வு பணி மேலப்பாளையம் வரை நடந்தது.

    இதில் புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே தண்டவாளம் மின் பாதை மற்றும் கருவிகள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பல பங்கேற்றனர்.

    அப்போது நாங்குநேரி ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்த பொதுமக்கள் சிலர், கொரோனாவுக்கு முன்பு நாங்குநேரி வழியாக 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்ற நிலையில் தற்போது 5 ரெயில்கள் மட்டுமே நாங்குநேரியில் நின்று செல்கிறது. பெரும்பாலான ரெயில்கள் நிறுத்தப்பட்டு விட்டன. எனவே நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்கவும் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் கேரள எல்லையில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் அனைத்து ரெயில்களும் என்று செல்லும் நிலையில் தமிழக எல்லைப் பகுதியில் பாரபட்சம் காட்டப்படுகிறது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாங்குநேரியில் ரெயில்களை நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்ட மேலாளர் உறுதி அளித்தார்.

    Next Story
    ×