search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா வருகை"

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2 நாள் பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India
    புதுடெல்லி:

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்களுக்கு இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக டெல்லி வரும் அவர் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.

    பட்டத்து இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சதி கூறினார். வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான எங்கள் பொதுவான நாட்டத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமான கூட்டாளியாகவும், மதிப்பு மிக்க நண்பராகவுமே இந்தியாவை சவுதி அரேபியா பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India
    மூன்று நாள் அரசுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டெல்லிக்கு இன்று வருகை தந்தார். #ranilwickremesinghe
    புதுடெல்லி:

    இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று இரவு டெல்லிக்கு வருகை தந்தார்.

    இந்தியா - இலங்கை இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே பயணம் அமையும் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.



    மேலும், வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை ரணில் விக்கிரம சிங்கே சந்தித்து பேசவுள்ளார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும் எனவும் வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

    இலங்கை அதிபரை கொல்ல இந்திய அமைப்பு ரா சதி செய்துள்ளது என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அரசுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே டெல்லிக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ranilwickremesinghe
    ரஷியா நாட்டின் அதிபரான விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #VladimirPutin
    புதுடெல்லி:

    ரஷியா நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புதின். இவர் அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

    தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார். அவரது வருகையின் போது 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    இந்தியாவுக்கு வருகை தரும் புதின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகின்றன.

    இந்திய பயணத்தை முடிக்கும் முன்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை புதின் சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #VladimirPutin
    நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். #NetherlandsPM #MarkRutte #Indiavisit

    புதுடெல்லி:

    நெதர்லாந்து நாட்டின் பிரதமரான மார்க் ருட்டே இரண்டு நாட்கள் பயணமாக இன்று (மே 24-ம் தேதி) இந்தியாவுக்கு வந்தடைந்தார். அவருடன் நெதர்லாந்து துணை பிரதமர் மற்றும் சில முக்கிய மந்திரிகளும் வந்துள்ளனர்.

    அவர்கள் டெல்லியில் நடைபெற உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் 130 நாடுகளை சேர்ந்த 231 தொழிலதிபர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது நெதர்லாந்து பிரதமர் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. #NetherlandsPM #MarkRutte #Indiavisit
    நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரண்டு நாள் பயணமாக மே 24-ம் தேதி இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #NetherlandsPM #MarkRutte #Indiavisit

    புதுடெல்லி:

    நெதர்லாந்து நாட்டின் பிரதமரான மார்க் ருட்டே வருகிற மே 24-ம் தேதி இரண்டு நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருடன் துணை பிரதமர், விவசாயம், இயற்கை மற்றும் உணவு தரத்துறை மந்திரி, வெளிநாட்டு வர்த்தக மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு மந்திரி, உள்கட்டமைப்பு மற்றும் நீர் முகாமைத்துவ மந்திரி, மருத்துவ பராமரிப்பு மந்திரி ஆகியோரும் இந்தியாவுக்கு வர இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியா வரும் அவர்கள் டெல்லியில் நடைபெற உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் 130 நாடுகளை சேர்ந்த 231 தொழிலதிபர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது நெதர்லாந்து பிரதமர் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. #NetherlandsPM #MarkRutte #Indiavisit
    ×