என் மலர்tooltip icon

    இந்தியா

    இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா இன்று இந்தியா வருகை
    X

    இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா இன்று இந்தியா வருகை

    • பதவியேற்றபின் முதல் முறையாக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா இந்தியாவிற்கு வருகிறார்.
    • இந்தியா, இலங்கை இடையே உள்ள பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்.

    புதுடெல்லி:

    இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா 3 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

    இந்நிலையில், இந்தியாவிற்கு வருகை தரும் ஹரிணி அமரசூர்யா இங்கு பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து இருநாட்டு நலன்கள் சார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

    இலங்கை பிரதமரின் வருகை, இந்தியா-இலங்கை இடையே உள்ள ஆழமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும். இந்தியாவின் 'மகாசாகர் தொலைநோக்குப் பார்வை' மற்றும் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' ஆகிய கொள்கைகளை வலுப்படுத்தும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இலங்கை பிரதமராக பதவியேற்றபின் இந்தியாவிற்கு அவர் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

    Next Story
    ×