search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்"

    • இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் 2012-13-க்குப் பிறகு நடைபெறவில்லை.
    • நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும். இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடருக்கு இணையாக இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல போட்டியை நடத்தும் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் சிறந்ததாக இருக்கும்.

    ஆனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக இந்தியா தொடர்ந்த குற்றம்சாட்டியது. மேலும், எல்லையில் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் இருநாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் கிடையாது என இந்தியா தெரிவித்தது.

    இதன்காரணமாக 2012-13-க்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை. உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர்பான தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன.

    இந்த நிலையில் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் சம்மதம் தெரிவித்தால், நாங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்த தயாராக இருக்கிறோம் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் சிஇஓ தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதற்கு காரணமும் உள்ளது. ஏனென்றால் இந்த மாதம் நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆஸ்திரேலியா செல்கின்றன. இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நவம்பர் 22-ந்தேதி தொடங்குகிறது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.

    அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான தொடரை நடத்திவிடலாம் என ஆஸ்திரேலியா விரும்புகிறது. 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை 90,293 ரசிகர்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ நிக் ஹாக்லி

    மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றால் நிதி ரீதியாக சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என விக்டோரியா அரசும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. விக்டோரியாவில்தான் மெல்போர்ன் மைதானம் உள்ளது.

    நாங்கள் பாகிஸ்தானுக்காக இந்த போட்டியை நடத்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவுக்காக போட்டியை நடத்துவதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களால் உதவ முடியும் என்றால் அது சிறப்பானது. ஆனால், இது இரு நாடுகளுக்கு இடையிலான தொடர். இது மற்றவர்களுக்காகத்தான் (இந்தியா அல்லது பாகிஸ்தான்) நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் உறுதி செய்யாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    விளையாட்டை அரசியலுடன் கலக்கக் கூடாது என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, வரவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023-ல் பங்கேற்க தனது கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

    இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் நிலை சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் நம்புகிறது.

    ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய அணி மறுத்ததால், பாகிஸ்தானின் இந்த முடிவை எடுத்தது. இருப்பினும், பாகிஸ்தான் தனது கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து முழு கவனம் கொண்டுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறோம்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய பயணத்தின்போது முழு பாதுகாப்பு குறித்து இந்தியா உறுதி செய்யும் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் ஏ அணி 352 ரன்கள் குவித்துள்ளது.
    • அடுத்து ஆடிய இந்தியா ஏ அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    கொழும்பு:

    வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆடியது. 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய தயப் தாஹிர் பவுண்டரி , சிக்சருக்கு விரட்டி சதமடித்து அசத்தினார். சைம் அயூப், சாஹிப்சாதா பர்ஹான் அரை சதமடித்தனர்.

    இந்தியா சார்பில் ரியான் பராக் , ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா

    ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து 61 ரன்னில் அவுட்டானார். யாஷ் துல் 39 ரன்கள், சாய் சுதர்சன் 29 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் இந்திய அணி 40 ஓவரில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • இந்திய அணியின் துவக்க வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 104 ரன்கள் விளாசினார்.

    கொழும்பு:

    வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா ஏ- பாகிஸ்தான் ஏ அணிகளுக்கிடையிலான போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணி 48 ஓவர்களில் 205 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரன்கள் சேர்த்தார். சாகிப்சதா பர்கான் 35 ரன்கள், முபாசிர் கான் 28 ரன்கள், ஹசீபுல்லா கான் 27 ரன்கள் எடுத்தனர்.

    இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது. துவக்க வீரர் சாய் சுதர்சன் பந்துகளை பவுண்டரிகளாக விளாசி சதம் கடந்தார். அபிஷேக் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகின் ஜோஸ் 53 ரன்கள் சேர்த்தார். 

    இதனால் இந்தியா 36.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 104 ரன்களுடனும், கேப்டன் யஷ் துல் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி, குரூப்- பி பிரிவில் தான் மோதிய 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    ×