search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய அளவில் திருச்சி 12வது இடம்"

    • திருச்சி விமான நிலைய ஓடுபாதை அருகே அமைந்துள்ள பிறாயடி கருப்பு கோவில் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.
    • விமான நிலையத்திற்குள் செல்ல விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரின் அனுமதி வழங்கப்பட்டது

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தை அடுத்த கோளரங்கம் அருகில் பிறாயடி கருப்பு கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் திருவிழா ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவானது ஆங்கிலேயர் காலம் முதல் ெதான்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    திருவிழா நடைபெறும் காலங்களில் திருச்சி விமான நிலைய ஓடுபாதை அருகில் உள்ள அய்யனார் மற்றும் காளியம்மன் கோவில் பகுதிக்கு சிறப்பு அனுமதி பெற்று விமான நிலைய வளாகத்திற்குள் சென்று சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த சிறப்பு பூஜை சுமார் 150 ஆண்டு காலமாக கொட்டப்பட்டு கிராம மக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழா நடைபெறுவதற்கு சுமார் ஒரு மாத காலம் முன்பாக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் கொட்டப்பட்டு கிராம மக்கள் இணைந்து பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்துவார்கள்.

    அதன் பேரில் திருவிழா விமான நிலைய ஓடுபாதை அருகில் உள்ள அய்யனார் மற்றும் காளியம்மன் கோவிலுக்கு சிறப்பு பூஜை நடத்துவதற்காக ஊர்வலமாக சென்று வர அனுமதி குறித்து ஆலோசிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் கடந்த மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தி சிறப்பு அனுமதி பெற்று நேற்று திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது ஓடுபாதை அருகில் உள்ள அய்யனார் மற்றும் காளியம்மன் கோவிலுக்கு சென்று வருவதற்கு விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரின் அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து பாதுகாப்புடன் விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு ஓடுபாதை அருகிலுள்ள கோவிலுக்கு சென்று அய்யனார் உருவமானது ஊர்வலமாக ரன்வேயில் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இந்த நிலையில் வருடத்தில் ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு அந்த கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. இந்த பூஜையானது நேற்று காலை தொடங்கியது. அப்போது சப்பரத்தில் அய்யனார் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான ஓடுபாதை அருகில் பூஜை நடத்திய பிறகு மீண்டும் பிறாயடி கருப்பு கோவிலுக்கு சப்பரத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் எடுத்து வந்த சப்பரம் பிறாயடி கருப்பு கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் 12-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் திருச்சி பிடித்துள்ளது.
    திருச்சி:

    மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற அமைச்சகம் இந்தியாவில் உள்ள நகரங்களில் வாழத்தகுந்த சிறந்த நகரங்கள் அடிப்படையில் நகரங்களை பட்டியலிட்டுள்ளது.

    கல்வி, நிர்வாகம், கலாச்சார அடையாளம், சுகாதாரம், பாதுகாப்பு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, திறந்த வெளியிடங்கள், மின்சாரம், போக்குவரத்து வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவுநீர் மேலாண்மை திடக்கழிவு மேலாண்மை, சுற்றுப்புற மாசு ஆகியவற்றின் வசதிகள் அடிப்படையில் இந்த பட்டியலில் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் சென்னை, கோவை, திருச்சி, மும்பை, டெல்லி, புனே உள்ளிட்ட 111 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றன. இதில் வாழத் தகுந்த சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் முதல் நகரமாக புனே நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மும்பை 3-வது இடத்தையும், திருப்பதி 4-வது இடத்தையும் பிடித்தன. இதில் தமிழகத்தில் திருச்சி நகரம் 12- வது இடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்

    சென்னை மாநகரம் 14- வது இடத்தையும், கோவை 25, ஈரோடு 26, மதுரை 28, திருப்பூர் 29, நெல்லை 37, திண்டுக்கல் 40, சேலம் 42, தஞ்சை 43, தூத்துக்குடி 44, வேலூர் 48 என தமிழ்நாட்டில் உள்ள மற்ற நகரங்கள் இந்தியாவில் வாழத்தகுதி மிக்க நகரங்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளன.

    மொத்தம் 15 பிரிவுகளில் கணக்கெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டதில் சுகாதாரத்தில் தேசிய அளவில் திருச்சிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அதேபோன்று கலாச்சாரத்தில் 3-வது இடத்தையும், மின் வினியோகத்தில் 2-வது இடத்தையும், மாசு குறைக்கப்பட்ட நகரத்தில் 3-வது இடத்தையும், பாதுகாப்பு அம்சங்களில் 9-வது இடத்தையும் திருச்சி பிடித்துள்ளது.

    தேசிய அளவில் திருச்சி நகரம் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் 12-வது இடமும் பிடித்து தமிழகத்தில் முதல் நகரமாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியான மற்றும் பெருமையான வி‌ஷயம் என திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    திருச்சி மாநகரில் மாநகராட்சி சார்பில் அதிக அளவிலான பூங்காக்கள் அமைத்து திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் அமைப்பு, திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக கையாளுதல் ஆகியவை தேசிய அளவில் திருச்சி 12-வது இடத்திற்கு வருவதற்கு காரணம் என அவர் கூறினார்.

    மேலும் தூய்மை இந்தியா திட்டத்தில் திருச்சி கடந்த ஆண்டு 13-வது இடத்தை பிடித்தது இந்த ஆண்டு மேலும் சிறப்பாக செயல்பட்டு மக்கள் பங்களிப்போடு திருச்சியை முதல் இடத்திற்கு கொண்டு வருவோம் என்றார். சுகாதார கணக்கெடுப்பு பிரிவில் திருச்சி முதலிடம் பெறுவதற்கு மாநகராட்சி சார்பில் அதிக அளவில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, சுகாதாரத்தை சிறப்பாக பராமரிப்பது காரணம் என அவர் கூறினார்.

    திருச்சி வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் 12-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது போல மலைக்கோட்டை மாநகர மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏமன் நாட்டின் சடா பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். #YemenAirStrikes
    சனா:

    ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

    சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

    இந்நிலையில், ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #YemenAirStrikes
    ஹெச்டிசி நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    ஹெச்டிசி நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு டிசையர் ஸ்மார்ட்போன்களில் முறையே 5.5 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேக்கள் கொண்டுள்ளன.

    டிசையர் 12 ஸ்மார்ட்போன் மீடியாடெக் MT6739 சிப்செட் 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    ஹெச்டிசி டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450, 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம், 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் லிக்விட்-சர்ஃபேஸ் டிசைன் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது.



    ஹெச்டிசி டிசையர் 12 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
    - பவர் விஆர் ரோக் GE8100 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த ஹெச்டிசி சென்ஸ் UI
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, BSI சென்சார்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2730 எம்ஏஹெச் பேட்டரி



    ஹெச்டிசி டிசையர் 12 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 450 பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 நௌக்கட் சார்ந்த ஹெச்டிசி சென்ஸ் UI
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, BSI சென்சார்
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2965 எம்ஏஹெச் பேட்டரி

    ஹெச்டிசி டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கல் கூல் பிளாக் மற்றும் வார்ம் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.15,800 மற்றும் ரூ.19,790 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 7-ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முலம் விற்பனை செய்யப்படுகிறது.
    ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    கலிஃபோர்னியா:

    ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருந்த ஹெச்டிசி யு12 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

    புதிய யு12 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் QHD பிளஸ் டிஸ்ப்ளே, ஹெச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் ஹெச்டிசி யு12 பிளஸ் 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் சார்ந்த சென்ஸ் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி வைடு ஆங்கிள் பிரைமரி கேமராஸ ஹெச்டிசி அல்ட்ராபிக்சல் 4, OIS மற்றும் 16 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, 84 டிகிரி ஃபீல்டு ஆஃப் வியூ, போக்கே மோட், ஏஆர் ஸ்டிக்கர், ஃபேஸ் அன்லாக் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    3D கிளாஸ் பாடி மற்றும் மெல்லிய பார்டர்களை கொண்டுள்ள யு12 பிளஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள எட்ஜ் சென்ச் 2 தொழில்நுட்பம் ஸ்குவீஸ் செய்து பல்வேறு அம்சங்களை இயக்க வழி செய்கிறது. இத்துடன் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 3500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.



    ஹெச்டிசி யு12 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் சூப்பர் எல்சிடி 6 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் ஹெச்டிசி சென்ஸ் UI
    - சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி ஹெச்டிசி அல்ட்ரா பிக்சல் 4 கேமரா, 1.4μm பிக்சல், f/1.75
    - 16 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 1.0μm பிக்சல், f/2.6
    - 8 எம்பி + 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, 1.12μm பிக்சல், f/2.0
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
    - 3500 எம்ஏஹெச் பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    ஹெச்டிசி யு12 பிளஸ் ஸ்மார்ட்போன் டிரான்ஸ்லுசென்ட் புளு, செராமிக் பிளாக், ஃபிளேம் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 64 ஜிபி மாடலின் விலை 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.54,630), 128 ஜிபி மாடல் 849 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.58,050) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். #cbseresults #CBSE12thResults
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.  

    பொருளாதாரவியல் பாடத்திற்கான கேள்வித்தாள் வாட்ஸ்-அப்பில் வெளியானதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, அந்த பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்டது.

    இந்நிலையில், 12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் உள்ள ரோல் நம்பர், பள்ளியின் எண் மற்றும் தேர்வு மைய எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். #cbseresults #CBSE12thResults
    ×