search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தி எதிர்ப்பு"

    • இந்தி திணிப்பு எங்கேயும் நடக்கவில்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
    • முதல் கல்விக்கொள்கை, இரண்டாவது கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பு மொழியாக இருந்தது.

    சென்னை:

    மத்திய அரசால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமான "ரோஜ்கார் மேளா" திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் 250 இளைஞர்களுக்கான பணி ஆணையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-

    சென்ற ஆண்டு 10 ஆம் வகுப்பில் 52,000 பேர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பல தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தாய்மொழியை வளர்க்க தி.மு.க. என்ன செய்துள்ளது? தமிழில் வைப்பதில் திமுகவுக்கு என்ன பிரச்சனை? தமிழகத்தில் குறிப்பாக என்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாமாண்டு தமிழ் கட்டாயம் என அறிவிக்கட்டும், நாங்கள் வரவேற்கிறோம். மருத்துவக் கல்லூரிகளில் தமிழ், நாங்கள் வரவேற்கிறோம்.

    புதுச்சேரியில் மருத்துவக் கல்வி தமிழில் கற்பிக்கப்படும் என மூன்று தினங்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார்கள். எதையுமே சொல்லாமல் நீங்களாகவே ஆங்கிலத்தை ஊக்குவிக்கிறீர்கள், இந்தியை ஊக்குவிக்கிறீர்கள், தமிழை வளர்க்கவில்லை. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதனால் திமுகவின் நாடகம் பொய் என தமிழக மக்களுக்குத் தெரியும். அதனால்தான் நம்மைப்போன்ற சாதாரண மக்கள் யாரும் இதைப்பற்றி பேசவில்லை. மாணவரணி, இளைஞரணி நீங்கள் பேசுகிறீர்கள். அடுத்து சட்டசபையில் உங்கள் எம்எல்ஏக்கள் பேசுகிறார்கள். அதுதானே தவிர, இது மக்கள் பிரச்சனையே கிடையாது. இந்தி திணிப்பு எங்கேயும் நடக்கவில்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். அது நடந்தது எல்லாமே காங்கிரஸ் காலகட்டத்தில். அப்போது திமுக கூட்டணியில் இருந்தது.

    முதல் கல்விக்கொள்கை, இரண்டாவது கல்விக்கொள்கையில் இந்தி கட்டாயம் மூன்றாவது மொழியாக திணிப்பு மொழியாக இருந்தது. இதற்கெல்லாம் முதலமைச்சர் பதிலே சொல்ல மாட்டார். காங்கிரஸ்காரர்கள் யாரும் பேசமாட்டார்கள்.

    முதல் கல்விக்கொள்கையை நாங்கள் 1968ல் கொண்டு வந்தோம், நாங்கள்தான் மூன்றாவது மொழியாக இந்தியை திணிப்பு மொழியாக வைத்தோம் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தன் நெஞ்சைத் தொட்டு சொல்லட்டும். 1986ல் ராஜீவ்காந்தி இந்தியை கொண்டு வந்தார், அதுவும் திணிப்பு மொழி. 92ல் ரிவிஷன் கொண்டு வந்தார்கள், அதுவும் திணிப்பு. ஆனால் 2019ல் வந்த புதிய கல்விக்கொள்கையில்தான் இந்தி என்ற வார்த்தையை எடுத்துவிட்டு உங்களுக்கு பிடித்த மொழி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை ஏன் பேச மறுக்கிறார்கள்? ஏன் முதலமைச்சர் பேசவில்லை. ஏன் காங்கிரஸ்காரர்கள் பேசவில்லை? ஏனென்றால் உண்மை அவர்கள் பக்கம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்,

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் பேட்டி
    • 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில்பாஜக பட்டியல் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.இதில் கலந்துகொண்ட பட்டியல்அணி மாநில தலைவர் தடா பெரியசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பட்டியல் இன மக்களுக்காக பாஜக அரசு செய்த சாதனைகளை பட்டியல் இன மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இலவச வீடு போன்ற திட்டங்கள் மோடி தந்துள்ளார்.

    பட்டியலின மக்களுக்காக பல்வேறு சாதனைகளை பாஜக அரசு செய்துள்ளது. திராவிட மாடல் எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு பட்டியல் சமுதாய மக்களுக்கு துரோகம் செய்கிறது.

    சமூகநீதி பேசும் இவர்கள் பட்டியல் சமுதாயத்திற்கு எதிராக நடக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிறப்பு கூர்நிதியை நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர்.

    பட்டியலின மக்களுக்கான சிறப்பு கூர் நிதி திட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்.திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை பஞ்சமி நிலத்தை மீட்போம் என்றார்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பஞ்சமி நிலத்தை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

    இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு போலி நாடகம். இந்தி அவர்களுக்கு மட்டும் தேவையாக உள்ளது‌ஆனால் ஏழை எளிய பொதுமக்களை இந்தி கற்க விடாமல் தடுக்கின்றனர்.

    திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தமிழே தெரியாது. ‌2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. மாவட்ட தலைவர் மனோகரன் பொதுச் செயலாளர் ஜெகன் மற்றும் பட்டியல் அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×