search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலன் பார்டர்"

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல்லை 7-வது இடத்தில் களம் இறக்குவது வேஸ்ட் என ஆரோன் பிஞ்ச் மீது பார்டர் குற்றம்சாட்டியுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் 7-வது வீரராக களம் இறங்கினார். 5 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர் 11 ரன்கள் சேர்த்தார்.

    இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல்லை 7-வது வீரராக களம் இறக்குவது வேஸ்ட் என்று ஆரோன் பிஞ்ச் மீது ஆலன் பார்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘மேக்ஸ்வெல் 7-வது இடத்தில் களம் இறங்குவது வேஸ்ட் என நான் உணர்கிறேன். மேக்ஸ்வெலால் தொடர்ச்சியாக அதிரடி ஆட்டத்தில் ஈடுபட முடியாது என்றாலும், சிறப்பான தொடக்கம் கொடுத்தால், சூழ்நிலைக்கு ஏற்ப 3-வது இடத்தில் அவரை களம் இறக்கலாம்’’ என்றார்.
    மைதானத்தில் துடிப்பாகவும், ஆக்ரோ‌ஷத்துடனும் செயல்படும் விராட் கோலி போன்ற வீரர்கள் தான் தற்போது கிரிக்கெட்டுக்கு தேவை என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கூறியுள்ளார். #ViratKholi #AUSvIND #AllanBorder
    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மைதானத்தில் ஆக்ரோ‌ஷத்துடன் செயல்படுவார். விக்கெட் வீழ்ந்ததும் துள்ளி குதித்து கத்தியபடி மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகிறார்.

    பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் கோலிக்கும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரும் நேருக்கு நேர் நின்று கோபத்துடன் பேசி கொண்டனர். நடுவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.


    கோலியின் ஆக்ரோ‌ஷ செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், கோலியை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதுபோன்று முன்னாள் வீரர்கள் சிலரும் கண்டித்து இருந்தனர்.



    இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



    மைதானத்தில் துடிப்பாகவும், ஆக்ரோ‌ஷத்துடனும் செயல்படும் விராட் கோலி போன்ற வீரர்கள் தான் தற்போது கிரிக்கெட்டுக்கு தேவை. தனது அணி விக்கெட்டை வீழ்த்தியதும் கேப்டனாக கோலி வெளிபடுத்தும் உணர்ச்சியை வேறு எந்த கேப்டனிடமும் இருந்தும் நான் பார்த்ததில்லை.



    அது உண்மையில் அதிகமானதுதான். ஆனால் அவர் சரியான பாதையில் செல்கிறார். தற்போது கோலியை போன்று குணாதிசயம் கொண்டவர்கள் கிரிக்கெட்டில் நிறையபேர் இல்லை. ‘நம்பர் ஒன்’ இருக்க நாங்கள் தகுதியானவர்கள் என்பதை நிரூபித்து ஒரு கேப்டனாக அன்னிய மண்ணிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமேன் கூறியதாவது:-

    விராட் கோலி மிகவும் உணர்ச்சிமிக்க வீரராக இருக்கிறார். இதனால் தான் மைதானத்தில் அவரிடம் இருந்து ஆக்ரோ‌ஷத்தை நீங்கள் பெறுகிறீர்கள்.



    அவர் சவால்களை உற்சாகத்துடன் எதிர்கொள்கிறார். எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார். தான் மட்டுமல்ல தனது நாடும் வெற்றி பெற வேண்டும் என்றே கருதுகிறார்.

    பெர்த் டெஸ்டில் கோலியும், டிம்பெய்னும் தங்களது எல்லையை தாண்டவில்லை. வேடிக்கையாக பேசி கொண்டனர். அவர்கள் ஜாலியாக பேசுவது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது என்றார். #ViratKholi #AUSvIND #AllanBorder
    ×