search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்கே நகர்"

    இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆர்.கே.நகர்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். #RKNagar
    இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் நடிகர் வைபவை வைத்து ‘ஆர்.கே.நகர்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார். 

    இதில் வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் நடித்திருக்கிறார். மேலும் சம்பத், இனிகோ பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வந்தது.



    தற்போது இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்திருக்கிறார். மேலும் தேர்தல் தேதி (படம் ரிலீஸ் தேதி)-யை விரைவில் அறிவிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். 
    ஆர்கே நகரில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்எஸ் ராஜேஷ் ஏற்பாட்டில் ரூ.18 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியமைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ராயபுரம்:

    வட சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஏற்பாட்டில் ஆர்.கே.நகரில் 18 மீனவ கிராமங்களில் ரூ.18 லட்சம் செலவில் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது.

    முதல் கட்டமாக ஆர்.கே. நகர் புதுமனைகுப்பம் மீனவ கிராமத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இந்த கேமரா இன்னும் முறைப்படி திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று புதுமனை குப்பத்திற்கு ஆட்டோவில் வந்த பெண் ஒருவர் தனது கைப்பை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு போன்றவற்றையும் தவற விட்டுவிட்டார். அந்த பகுதியில் புதிதாக அமைக் கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் அந்த ஆட்டோ குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது.

    இதையொட்டி அ.தி.மு.க. பிரமுகர்கள் அந்த கண்காணிப்பு காட்சிகளை காவல் துறையிடம் அளித்தனர். போலீசார் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரை கண்டுபிடித்து தொலைந்த பொருட்களை மீட்டு அந்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷை சந்தித்து கண்காணிப்பு கேமரா பொருத்தியமைக்கு நன்றி தெரிவித்தனர். #tamilnews
    ஆர்.கே.நகரில் போலி பீடி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    செனாய் நகரை சேர்ந்தவர் ஜோஷிதரன். பிரபல பீடி கம்பெனியில் மானேஜராக உள்ளார். இவர் தங்களது பீடி கம்பெனி பெயரில் போலியாக பீடி தயாரித்து விற்கப்படுவதாக ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராயபுரம், கொருக்குப்பேட்டை பகுதியில் போலி பீடி தயாரித்து விற்ற சண்முகவேல், ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போலி பீடிகள்,, லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×