search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகரில் போலி பீடி தயாரித்த 2 பேர் கைது
    X

    ஆர்.கே.நகரில் போலி பீடி தயாரித்த 2 பேர் கைது

    ஆர்.கே.நகரில் போலி பீடி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    செனாய் நகரை சேர்ந்தவர் ஜோஷிதரன். பிரபல பீடி கம்பெனியில் மானேஜராக உள்ளார். இவர் தங்களது பீடி கம்பெனி பெயரில் போலியாக பீடி தயாரித்து விற்கப்படுவதாக ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராயபுரம், கொருக்குப்பேட்டை பகுதியில் போலி பீடி தயாரித்து விற்ற சண்முகவேல், ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போலி பீடிகள்,, லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×