search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி பஸ் தீப்பிடித்தது"

    பெங்களூருவில் இருந்து திருப்பூர் சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 28 பயணிகள் உயிர் தப்பினர்.
    சூளகிரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு ஆம்னி சொகுசு பேருந்து புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தின் மேற்கூறையில் அதிக சரக்குகளை ஏற்றி வந்தனர். இன்று அதிகாலை 1.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சின்னாறு அருகே வரும்போது பஸ்சின் மேல்கூறையில் இருந்த பொருட்கள் திடீரென்று தீபிடித்து எரிந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து ஆம்னி பஸ்சின் டிரைவரான பெங்களூருவை சேர்ந்த சவுக்கருக்கு தகவல் கொடுத்தனர். அவர் பஸ்சை நிறுத்தி விட்டு பஸ்சில் பயணம் செய்த 28 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கினார். என்றாலும் தீ மளமளவென்று பரவி பஸ் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. 

    இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓசூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 1  மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. 

    இந்த தீ விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சரியான நேரத்தில் டிரைவருக்கு தகவல் கொடுத்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  பஸ்சின் மேல்கூறையில் தீப்பெட்டி அல்லது பட்டாசுகள் ஏற்றி வரப்பட்டதா? அல்லது மின் வயரில் இருந்து தீப்பொறி பறந்து பொருட்கள் மீது விழுந்து தீப்பிடித்ததா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
    உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி டிரைவர் பஸ்சைஅதிவேகமாக ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டதாக உயிர் தப்பிய பயணிகள் கூறியுள்ளனர்.
    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது பஸ் மோதியதில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த 13 பேர் ஜன்னலை உடைத்துக்கொண்டு கீழே குதித்து உயிர்தப்பினர்.

    இந்தவிபத்து குறித்து உயிர்தப்பிய பயணிகள் கூறியதாவது:-

    பஸ் சென்னையில் இருந்து புறப்பட்டபோதே பஸ்சின் டிரைவர் பஸ்சை அதிவேமாக ஓட்டி சென்றார். இதனால் நாங்கள் அச்சத்துடன் பயணம் செய்தோம்.

    சில பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் லாரி மீது பஸ் டமார் என்று மோதியது. சிறிது நேரத்தில் லாரியும், பஸ்சும் தீ பிடிக்க தொடங்கியது.

    இதில் நாங்கள் அனைவரும் கூச்சல் போட்டு அலறினோம். பின்னர் ஜன்னலை உடைத்து கீழே குதித்து உயிர்தப்பினோம். பஸ் டிரைவர் வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது.

    ஆம்னி பஸ் டிரைவர்கள் அனைவரும் மின்னல்வேகத்தில் ஓட்டிசெல்வதால் விபத்து ஏற்படுகிறது. எனவே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். வேகமாக ஓட்டும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் இந்த விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    அஜீஸ்நகர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள வளைவு பகுதியில் செல்லும்போது பஸ் டிரைவர்கள் அதிவேகமாக செல்கிறார்கள். இதனால் டிரைவர்களின் கட்டப்பாட்டை இழந்து பஸ்கள் விபத்துக்குள்ளாகிறது.

    மேலும் அந்த பகுதியில் மின்விளக்கும் எரிவதில்லை. இதனால் இரவில் வரும் வாகனங்கள் அந்த பகுதியில் விபத்தில் சிக்கிக்கொள்கிறது.

    எனவே அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க வேண்டும். மேலும் ஆம்னி பஸ்களை வேகமாக ஓட்டி வரும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதிய விபத்தில் தீ பிடித்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் மதுரை நோக்கி புதுவை பதிவு எண் கொண்ட என்.எல்.எல். என்ற ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 26 பயணிகள் இருந்தனர். மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த டிரைவர் அலெக் சாண்டர் (வயது 59) பஸ்சை ஓட்டி சென்றார்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ் நகர் என்ற இடத்தில் நள்ளிரவு 1.30 மணி அளவில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அரியலூரில் இருந்து ஆந்திரா மாநிலம் நெல்லூரை நோக்கி சிமெண்ட் ஏற்றிய டேங்கர் லாரி வளைவில் திரும்பியது.

    கண்இமைக்கும் நேரத்தில் வேகமாக சென்ற பஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் டீசல் டேங்க் டமார் என்று பயங்கர சத்ததுடன் வெடித்தது.

    இதனால் பஸ்சும், லாரியும் திடீரென்று தீ பிடிக்க தொடங்கியது. தூங்கி கொண்டிருந்த பயணிகள் அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். பஸ் தீப்பிடித்து எரிவதை பார்த்து கூச்சல் போட்டனர்.


    பயணிகள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். பஸ் முழுவதும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. உள்ளே இருந்தவர்கள் கூக்குரல் போட்டு அலறினர். பின்னர் சிலர் பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அதன் வழியாக கீழே குதித்தனர்.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 3 பேர் மற்றும் டேங்கர் லாரி டிரைவர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

    1) ஆம்னி பஸ் டிரைவர் அலெக்சாண்டர் (53), அலங்காநல்லூர், மதுரை.

    2) சக்திவேல் (58), பஸ் டிரைவரின் உதவியாளர், பராசக்தி நகர், மதுரை.

    3) மோனிஷா (23)விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை.

    4) லாரி டிரைவர் முருகன் (53), நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி.

    இந்த விபத்தில் காயம் அடைந்த 10 பேரையும் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.

    காயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1) செல்வநாயகி (60), செங்கல்பட்டு.

    2) தமிழ்ச்செல்வன் (30), புதுக்கோட்டை.

    3) கேசவன் (30), மதுரை.

    4) தியாகு (28), மதுரை.

    5) வைதேகி (56), மதுரை உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    மங்கலம்பேட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×