search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டுகள்"

    • முதல் கட்ட பணிகள் தொடங்கியது
    • நேற்று காலை 10 மணிக்கு பாலாலயம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கன்னியாகுமரி :

    சாமிதோப்பு அருகே உள்ள உப்பளத்தின் நடுப்பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அளத்து பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மின்சார வசதிகள் இன்றி இருந்த கோவிலை மின்சார வசதிகள் ஏற்படுத்தி கோவிலை புனரமைக்க வேண்டும் என்று வடக்கு தாமரைகுளம் பண்ணையார் சமுதாய பொதுமக்கள் மற்றும் கோவிலை சுற்றி உள்ள வட்டார ஊர் பொதுமக்கள் தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் அந்த கோரிக்கையை அவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அளத்து பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி அலங்கார விளக்குகள் அமைத்து கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக கோவிலுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு பழமை மாறாமல் புனரமைப்பு பணிகள் தொடங்க நேற்று காலை 10 மணிக்கு பாலாலயம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் மற்றும் நகை சரிபார்க்கும் அலுவலர் ஜான்சி ராணி தலைமை தாங்கினார். தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரை பாரதி, இந்து சமய அறநிலையத்துறை நாகர்கோவில் தொகுதி ஆய்வாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலாலயம் பூஜையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் அளத்து பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காரியம் ஸ்ரீ ராமச்சந்திரன் செய்து இருந்தார்.

    • 200-ரூ பணம் பறித்ததாக இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
    • போலீசார் ரவுடி மணியை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 37). இவர் கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி சாலையில் சென்ற போது, திருவிடைக்கோடு பகுதியைச் சேர்ந்த மணி என்ற பல்லன் மணி வெட்டுக்கத்தியால் காயம் ஏற்படுத்தி 200-ரூ பணம் பறித்ததாக இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இவ்வழக்கு இருபது வருடங்கள் இரணியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது நேற்று இரணியல் சார்பு நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி பிரபல ரவுடி மணிக்கு 25000-ரூ அபராதம் மற்றும் 10-ஆண்டு சிறை தண்டனை விதித்தார் 20-ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் இரணியல் சார்பு நீதிமன்றம் தீர்பளித்த நிலையில் இரணியல் போலீசார் ரவுடி மணியை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்

    • தான் மறைத்து வைத்திருந்த கம்பியால் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் மீது கொலை வெறி தாக்கு தல் நடத்தி விட்டு தப்ப முயன்றார்.
    • 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி, போலீசாரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள இஞ்சி விளை பகுதியை சேர்ந்த வர் ஸ்டாலின், தொழிலாளி.

    கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையான இவன், கடந்த 2010-ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஓரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாறசாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்டாலினை தேடி வந்தனர். ஆனால் அவன் தலைமறைவாகி விட்டான். கடந்த 12 வருடங்களாக போலீசார் பல இடங்களில் தேடியும் ஸ்டாலின் எங்கு உள்ளார் என்பது தெரி யாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஸ்டாலின், தனது சொந்த ஊரான இஞ்சி விளையில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாறசாலை போலீஸ் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜிதின், ஜாண் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அவர்கள் ரகசியமாக கண்காணித்து இஞ்சிவிளை பகுதியில் ஸ்டாலினை சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் ஸ்டாலின் தப்பி ஓட முயன்றார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கம்பியால் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் மீது கொலை வெறி தாக்கு தல் நடத்தி விட்டு தப்ப முயன்றார்.

    ஆனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் விரைந்து செயல்பட்டு ஸ்டாலினை மடக்கி பிடித்த னர். தொடர்ந்து அவனை கைது செய்து போலீஸ் நிலை யம் கொண்டு சென்று பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    12 வருடங்களாக தலை மறைவாக எங்கு தங்கியி ருந்தான்? யார் அவனுக்கு உதவி செய்தார்கள்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் தாக்குத லில் காயமடைந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் பாறசாலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவனந்தபுரம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி, போலீசாரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×