search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே பிரபல ரவுடி பல்லன் மணிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்
    X

    இரணியல் அருகே பிரபல ரவுடி பல்லன் மணிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்

    • 200-ரூ பணம் பறித்ததாக இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
    • போலீசார் ரவுடி மணியை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 37). இவர் கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி சாலையில் சென்ற போது, திருவிடைக்கோடு பகுதியைச் சேர்ந்த மணி என்ற பல்லன் மணி வெட்டுக்கத்தியால் காயம் ஏற்படுத்தி 200-ரூ பணம் பறித்ததாக இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இவ்வழக்கு இருபது வருடங்கள் இரணியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது நேற்று இரணியல் சார்பு நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி பிரபல ரவுடி மணிக்கு 25000-ரூ அபராதம் மற்றும் 10-ஆண்டு சிறை தண்டனை விதித்தார் 20-ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் இரணியல் சார்பு நீதிமன்றம் தீர்பளித்த நிலையில் இரணியல் போலீசார் ரவுடி மணியை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்

    Next Story
    ×