search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழித்தனர்"

    • விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்து விவசாயம் செய்து வருகிறார்.
    • பயிரில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டு வந்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் பெரிய பலாப்பூண்டி பகுதியில் உள்ள வெள்ளையன் மகன் ஆண்டிர் அவருடைய விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்து விவசாயம் செய்து வருகிறார். அந்த மரவள்ளிக்கிழங்கு பயிரில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டு வந்துள்ளார். இது குறித்து கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் ரகசிய தகவல் கிடைத்தது .அவர் தலைமையிலான போலீசார் ஆண்டி விவசாய நிலத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு சட்ட விரோதமாக மரவள்ளிக்கிழங்கு பயிர் இடையே கஞ்சா பயிரிட்டுள்ளதை கண்டுபிடித்து அழித்தனர்.

    • தேத்தாகுடி தெற்கு கீழவெளியில் முகமது அப்துல்நாசர் என்பவா் சாராயம் விற்றுக்கொண்டிருந்தார்.
    • பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி சாராயம் 110 லிட்டரை போலீசார் கொட்டி அழித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேதாரண்யம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இங்கா்சால் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கோடியக்காடு மீனாட்சித்தெருவைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 28), கோடியக்கரை காளிதாஸ் (40) ஆகியோர் பூநாரை இல்லம் பகுதியிலும், செம்போடை அன்பரசன் (42) என்பவர் அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திலும், தேத்தாகுடி தெற்கு கீழவெளியில் முகமதுஅப்துல்நாசர் (38) என்பவா் அப்பகுதியிலும் மற்றும் வேதாரண்யம் நகர் பகுதி மோட்டாண்டிதோப்பு பகுதியில் சாராயம் விற்ற ராஜா (32) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி சாராயம் 110 லிட்டரை கொட்டி அழித்தனர்.

    ×