search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வராயன்மலையில்  மரவள்ளிக்கிழங்கு பயிரில் ஊடுபயிராக கஞ்சா பயிர் போலீசார் அழித்தனர்
    X

    கல்வராயன்மலையில் மரவள்ளிக்கிழங்கு பயிரில் ஊடுபயிராக கஞ்சா பயிர் போலீசார் அழித்தனர்

    • விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்து விவசாயம் செய்து வருகிறார்.
    • பயிரில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டு வந்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் பெரிய பலாப்பூண்டி பகுதியில் உள்ள வெள்ளையன் மகன் ஆண்டிர் அவருடைய விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்து விவசாயம் செய்து வருகிறார். அந்த மரவள்ளிக்கிழங்கு பயிரில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டு வந்துள்ளார். இது குறித்து கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் ரகசிய தகவல் கிடைத்தது .அவர் தலைமையிலான போலீசார் ஆண்டி விவசாய நிலத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு சட்ட விரோதமாக மரவள்ளிக்கிழங்கு பயிர் இடையே கஞ்சா பயிரிட்டுள்ளதை கண்டுபிடித்து அழித்தனர்.

    Next Story
    ×