search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுபஸ்"

    • சந்தோஷ்குமார் (28), விவசாயி, இவர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
    • அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் கிழக்குத் தெரு சேர்ந்தவர்மாணிக்கவேல் இவரது மகன் சந்தோஷ்குமார் (28), விவசாயி,இவர்,நேற்று இரவு 7 மணிக்கு நடுக்குப்பம் 4 முனை ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியதுங இதில் சந்தோஷ்குமாருக்கு நெற்றியில் பலத்த அடிபட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர்புதுவை பீம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டி குப்பம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ரகுபதிராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் 7-வது குறுக்குத்தெரு காயிதே மில்லத்நகரை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் (வயது56). இவரது மகன் செய்யது முஸ்தபா ஆரிப் (19).

    மெக்கானிக்

    இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கம்பெனியில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பைக்கை அவருடன் வேலை பார்க்கும் காயல்பட்டினம் மேலநெசவு தெருவை சேர்ந்த ரகுபதிராஜா (25) என்பவர் ஓட்டி சென்றார். ஆரிப் பின்னால் அமர்ந்து சென்றார்.

    பஸ் மோதி விபத்து

    அவர்கள் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சென்ற போது எதிரே வந்த ஒரு அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

    வாலிபர் பலி

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு ரகுபதிராஜா பரிதாபமாக உயிரிழந்தார். ஆரிபுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக பஸ்சை ஓட்டிவந்த விளாத்திகுளம மீனாட்சிபுரத்தை சேர்ந்த ரவி (43) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×