search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூரில் அரசுபஸ் மோதி வாலிபர் பலி
    X

    ஆத்தூரில் அரசுபஸ் மோதி வாலிபர் பலி

    • அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ரகுபதிராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் 7-வது குறுக்குத்தெரு காயிதே மில்லத்நகரை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் (வயது56). இவரது மகன் செய்யது முஸ்தபா ஆரிப் (19).

    மெக்கானிக்

    இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கம்பெனியில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பைக்கை அவருடன் வேலை பார்க்கும் காயல்பட்டினம் மேலநெசவு தெருவை சேர்ந்த ரகுபதிராஜா (25) என்பவர் ஓட்டி சென்றார். ஆரிப் பின்னால் அமர்ந்து சென்றார்.

    பஸ் மோதி விபத்து

    அவர்கள் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சென்ற போது எதிரே வந்த ஒரு அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

    வாலிபர் பலி

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு ரகுபதிராஜா பரிதாபமாக உயிரிழந்தார். ஆரிபுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக பஸ்சை ஓட்டிவந்த விளாத்திகுளம மீனாட்சிபுரத்தை சேர்ந்த ரவி (43) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×