search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசின் திட்டங்கள்"

    • அரசின் திட்டங்கள் உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொழில்துறை ஆணையர் வலியுறுத்தினார்.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தொழில் துறை ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட த்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு நடந்தது.

    மேலும் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை களின் சார்பில் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்கப் பட்டது. ஒவ்வொரு துறை யிலும் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் அந்தந்த ஆண்டிலேயே முடிக்க வேண்டும். அது மட்டுமின்றி பொதுமக்களுக்கு உரிய காலத்தில் அரசின் திட்டங்கள் சென்றால்தான் அதன் பயன் அவர்களுக்கு முழுமையாக கிடைத்திட முடியும் என்பதை அறிந்து அந்தந்த துறைகள் செயல்படுவதுடன் திட்டங்கள் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தொழில்துறை ஆணையர் அர்ச்சனா அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    முன்னதாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் குயவன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் காலை உணவு திட்டத்தின் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தோட்டக்க லைத்துறையின் மூலம் சுந்த ரமுடையான் ஊராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையினையும், நொச்சி ஊரணியில் உள்ள நாற்றங்கால் பண்ணை யினையும் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன் அவர்கள், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் அவர்கள், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சேரும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும் என மத்திய மந்திரி அறிவுறுத்தினார்.
    • வேளாண்மை துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி ஜான் பெர்லா தலைமையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வீடுகள் குறித்தும், பண்ணை குட்டை அமைத்தல், புதிய குளங்கள் அமைத்தல் போன்ற திட்ட பணிகள் குறித்து மத்திய மந்திரி கேட்டறிந்தார்.

    கிராமப் பகுதிகளில் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை அதிகளவு மேற்கொள்ள திட்டமிட வேண்டும் என அலுவலர்களிடம் தெரிவித்தார். வேளாண்மை துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    விவசாயிகளின் தேவைக்கேற்ப திட்டங்களை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். மத்திய மந்திரி பேசுகையில், மாணவர்களின் கல்விக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உயர் கல்வி படிக்கின்ற மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உரிய காலத்திற்குள் கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன்களை காலதாமதம் இன்றி கிடைக்க அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    கல்வியின் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி வேண்டு மானாலும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் மன்சூர், கோட்டாட்சியர்(பொறுப்பு) மரகதநாதன், பரமக்குடி கோட்டாட்சியர் முருகன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் அரசு முதன்மைச் செயலாளர், தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது

    தேனி:

    தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் சார்பில் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட திருமலாபுரம் ஊராட்சிப்பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்,

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர், தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கார்த்திக், மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் கல்வி மையத்திற்கான கட்டுமானப்பணி, ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட திருமலாபுரம் ஊராட்சிப்பகுதியில்,

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வரும் பணி, ரூ.7.97 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரணி சீரமைப்பு பணி, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ரூ.5.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவியர்களுக்கான கழிப்பறை கட்டும்ப்பணி, ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரணி சீரமைப்பு பணி,

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1.15 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பண்ணைகுட்டை அமைக்கும் பணி, வரப்புகளில் மரகன்றுகள் நடவு செய்யும் பணி, ரூ.2.21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளை கிணறு பணி, ரூ.2.32 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளை கிணறு ஆகியவற்ைற ஆய்வு செய்து தெரிவித்தாவது,

    தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகளை ஒவ்வொரு துறையினரும் மற்ற துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து ஒருமித்து செயல்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் பணியாற்றிட வேண்டும். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    ×