search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசின்"

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தீன்தயாள் உபாத்யாய கிரா மின் கவுசல்ய யோஜனா (கிராமப்பபுற திறன் பயிற்சி) போன்ற அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் வினாக்கள், தகவல்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அழைப்பு மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். தமிழகத் தின் எந்த பகுதியில் இருந்தும் தொலைபேசி அல்லது கைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு திட்ட விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி பெற முடியும்.

    குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சி கள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுய உதவிக்குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்கு தல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியன குறித்தும் விளக்கங்கள் பெறலாம்.

    மேலும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளை ஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறு வனங்கள் மூலம் வழங்கப் படும் பயிற்சிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். அதேபோல் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புற இளைஞர்கள், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சிகள், பயிற்சி மையங் கள், தகுதிகள், பயிற்சியின் போது வழங்கப்படும் வசதிகள் ஆகியன குறித்தும் தகவல்கள் பெறலாம்.

    எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் 155330 அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்று பயன டையலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • கனிமொழி எம்.பி. பேச்சு
    • ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கலைஞர் பிறந்தநாள் நிகழ்வுகளை ஓராண்டுக்கு தி.மு.க. மற்றும் அரசு சார்பில் நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டி ருக்கிறார். சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேசும்போது வரும் நாடாளு மன்ற தேர்தலுக்கு நம்மை ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அன்பு கட்டளை விடுத்துள்ளார். யார் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய தேர்தல் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவதுதான் கலைஞருக்கு நாம் தரும் நூற்றாண்டு பரிசாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    சிலர் இந்த பகுதி எல்லாம் வெற்றி பெற்று விடலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அக்கனவு பலிக்காது. இங்கு மீண்டும் தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணி வேட்பாளரை தவிர யாரும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக ஒரு ஆய்வு நடத்தி இருக்கி றோம். தி.மு.க. மகளிர் அணியில் இன்னும் அதிகமான பெண்களை இணைக்க வேண்டும். அவர்களை செயல்பட கூடியவர்களாக மாற்ற வேண்டும். அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு தர வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தி.மு.க.வில் அரசியலை தொடங்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

    கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா வழியில் வந்த தி.மு.க. அரசு தமிழ கத்தின் சுயமரியாதையை என்றும் காக்கும். தமிழகத்தின் உரிமை மற்றும் அதன் அடையாளத்தை பாதுகாப்பதில் தி.மு.க. அரசுக்கு நிகர் யாருமில்லை என்பது மக்களுக்கு தெரி யும். தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை சொல்ல கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் மூலம் வாய்ப்பு கிடைத்தி ருக்கிறது. எதிர் அணியினர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பு கிறார்கள். அதை முறிய டிக்கும் வகையில் நாம் நேரடியாக மக்களை சந்தித்து உண்மைகளை எடுத்துக்கூற வேண்டும். கட்சிப்பிரதிநிதிகள், தொண்டர்கள் தேர்த லுக்கான பணிகளை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தி.மு.க. அலுவலகத்தின் முன்பகுதி யில் உள்ள கலைஞர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாநக ராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில நிர்வாகிகள் ஜோசப் ஸ்டாலின், நசரேத் பசலி யான், தில்லை செல்வம், பாபு வினி பிரட், தாமரை பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஆர்.எஸ்.பார்த்தசாரதி, துணை மேயர் மேரி பிரின்சிலதா, ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திர குமார், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் வந்த கனிமொழி எம்.பி.க்கு நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பெண்கள் மற்றும் ஏழை களுக்கு தி.மு.க.பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள மாநி லங்களில் தமிழ்நாடு வளர்ச்சி பணியில் ஒரு முன் உதாரணமாக விளங்கி வரு கிறது. தமிழக கவர்னர் தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வரு கிறார். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அவர் கருத்துக் களை தெரிவித்து வருகிறார். இதனை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்தும் கவர்னர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவோ கண்டிக்கவோ இல்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறலாம்.
    • தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தில் www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம்.

    ஈரோடு:

    தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நலவாரியத்தில் 18 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் செயல்படுகிறது.

    இதில் பல்வேறு வகையான கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறலாம்.பனை மரம் சார்ந்த தொழிலாளர்கள், தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தில் www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம்.

    5 ஆண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் பதிவை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு, குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, கண் கண்ணாடி, நியமனதாரருக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை, 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படும்.

    ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், அசல் ஆதார் அட்டை, அசல் ரேஷன்கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், வயதுக்கான ஆவணங்களை www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம்.

    கூடுதல் விபரத்தை, 0424 2275591, 2275592 என்ற எண்ணில் அறியலாம். இந்த தகவலை தொழி லாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×